தமிழ் பற்று வேஷம் போடும் கோடம்பாக்க நட்சத்திரங்கள்

தமிழகத்தில் கடந்த ஓராண்டாக தமிழ்ப் பற்றும், இந்தித் திணிப்பும் என பரபரப்பாக சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. தமிழுக்கு ஆதரவாகவும், இந்தித் திணிப்புக்கு எதிராகவும் பல சினிமா பிரபலங்களும் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்து வருகிறார்கள் இந்தியாவில் பிராந்தியமொழிகளில் தயாரிக்கப்படும் படங்களில் அதிகமாக ஆங்கில வசனங்கள் பேசப்படுவது தமிழ் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது

தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு அதன் மீது பற்றும், பாசமும் இருப்பது இயல்பானதுதமிழுக்காகவே தங்களை அர்ப்பணித்தது போல பேசும் சிலர் வெளியில் தமிழ்…தமிழ்…எனப் பேசிவிட்டு, திரை மறைவில் இந்தி வாலாக்களுக்குவலை வீசுவதையும் பார்க்க முடிகிறது.

தமிழ் சினிமாவில் 1980களுக்கு பின்இந்தி மொழி பேசும் சினிமா நட்சத்திரங்கள்தான் முன்னணியில் இருந்து வருகிறார்கள். இங்குள்ள தமிழ் பேசத் தெரிந்த, தமிழ் நடிகைகளுக்கு  தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் வாய்ப்பளிப்பது இல்லை.தமிழ் நடிகைகளுக்கு சில லட்சங்கள் சம்பளம் தந்தாலே போதும். ஆனால், இந்தியில் இருந்து வரும் நடிகைகளுக்கு கோடிகளில் சம்பளம், அவர்களுடன் வரும் உதவியாளர்களுக்கு லட்சங்களில் சம்பளம் என எத்தனை கோடி செலவானாலும் தரத் தயாராக இருக்கிறார்கள்.

இங்கு வெற்றி பெற்று ஓரளவு பேரும், புகழும் அடைந்த சிலருக்கு உடனே இந்திக்குப் போக வேண்டும் என்று ஆசை. இயக்குனர்கள், நடிகர்கள், நடிகைகள் என பலருக்கும் அந்த ஆசை உண்டு. இங்கிருந்து அங்கு போக வேண்டும் என்ற ஆசையில் சிலர் இருக்க, இங்கு தங்களை நிலை நிறுத்திக் கொள்ள அங்கிருந்து இங்கு ஆட்களை அழைத்து வருபவர்களும் அதிகமாகிக் கொண்டே வருகிறார்கள். அது நடிகை, நடிகர்களுடன் நின்று விடாமல் தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் வரை கூடிக் கொண்டே போகிறது. இந்தியை தீவிரமாக எதிர்க்கும் திமுகவின் வாரிசு நடிகரான உதயநிதி ஸ்டாலின் இந்தி தயாரிப்பாளரான போனி கபூர் தயாரிப்பில் நடித்துள்ள படம் தான் நெஞ்சுக்கு நீதி. அந்த படம் இந்தி படமான ‛ஆர்டிக்கிள் 15′ படத்தின் தமிழ் பதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்குமார் தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தித் தயாரிப்பாளரான போனி கபூர் தயாரிப்பில் நடித்து வருகிறார். “நேர்கொண்ட பார்வை, வலிமை” படங்களைத் தொடர்ந்து தன் 61வது படத்தையும் அவர் தயாரிப்பில்தான் நடிக்கிறார் அஜித்குமார்தமிழில் தொடர்ந்து தன்னை ஒரு தனித்துவமான இயக்குனர் எனக் காட்டிக் கொள்ளும் பா.ரஞ்சித் கடைசியாகத் தயாரித்த ‘ரைட்டர்’ படத்திற்கு இந்தி தயாரிப்பாளர்களுடன்தான் கூட்டு சேர்ந்துள்ளார். ‘பிர்சா முண்டா’ வாழ்க்கை வரலாற்றுப் படத்தை இந்தியில் இயக்குவதாக அறிவித்தார்.தங்கள் குடும்பத்தையே தமிழ் ஆதரவாளர் குடும்பமாகக் காட்டிக் கொள்ளும் சூர்யா, அக்க்ஷய்குமார் நடிக்கும் ‘சூரரைப் போற்று’ படத்தை இந்தியில் தயாரிக்கிறார். அது மட்டுமல்ல கடந்த சில வருடங்களாக அவர் நடித்த படங்களை இந்தியிலும் டப்பிங் செய்து வெளியிட அவர் எந்த மறுப்பும் சொல்லவில்லை.

சர்ச்சைகள் வரும் போதெல்லாம் தன்னை தமிழுக்கு ஆதரவாகக் காட்டிக் கொள்ளும் ஏ.ஆர்.ரஹ்மான், இந்தியில் இசையமைத்த படங்கள் தான் அதிகம் வெற்றி பெற்றுள்ளனஅவரை உலக அளவிற்கும் கொண்டு சென்றுள்ளன. இப்போதும் இந்தி சினிமாவை விட்டு அவர் விலகவில்லை.இந்தி தெரியாது போடா’ என்று டி ஷர்ட் போட்டு பரபரப்பை ஏற்படுத்திய சமயத்தில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, ‛ஐயம் தமிழ் பேசும் இந்தியன்’ என்ற வாசகம் அடங்கிய டி-ஷர்ட்டை அணிந்திருந்தார். இவரும் இந்தியில் ராஜா நட்வர்லால் என்ற படத்தில் பாடல்களுக்கு மட்டும் இசையமைத்துள்ளார். அதேபோன்று சமீபத்தில் இந்தியில் டாப் டக்கர் என்ற ஆல்பம் வெளியானது. இதில் ராஷ்மிகா மந்தனாவுடன்ஆடி, பாடி, நடித்து இசையும் அமைத்திருந்தார்
யுவன்சங்கர்ராஜா அவரைபோன்று ‘இந்தி தெரியாது போடா’ என்று டி ஷர்ட் போட்டு பரபரப்பை ஏற்படுத்திய தெலுங்கை தாய் மொழியாகக் கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ், ‘டாடி’ என்ற இந்திப் படத்தில் நடித்திருக்கிறார்.இப்படி சமூகவலைத்தளங்களில்இந்தியை எதிர்த்துப் பேசிவிட்டு, பணத்துக்கும், புகழுக்காகவும் இந்திக்கு சிவப்புக் கம்பளம் விரிப்பவர்கள்பேசுவது ஒன்று, செய்வது மற்றொன்றாக இருக்கிறது