2019ஆம் ஆண்டுக்கான நார்வே தமிழ் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இதில் கடந்த வருடம் வெளியான பல தமிழ் திரைப்படங்கள் கலந்துகொண்டன.
சமீபத்தில் நடைபெற்ற விகடன் விருதுகள் விழாவில் ஒத்த செருப்பு படம் எந்தப் பிரிவிலும் பரிந்துரைக்கப்படாததை கண்டித்து தன் அதிருப்தியை பார்த்திபன் பதிவு செய்து இருந்தார்.
பல புது முயற்சிகளை முன்னெடுத்த பார்த்திபன் அவர்களின் ஒத்த செருப்பு திரைப்படம், ஆசியாவிலேயே முதல் முறையாக ஒரு தனி மனிதரே எழுதி இயக்கி, நடித்து, தயரித்த படம் என்ற பெருமையுடன் வெளிவந்தது. தற்பொழுது தன்னுடைய அடுத்த திரைப்படமான “இரவின் நிழல்” என்ற ஒரே ஷாட்(single shot film) திரைப்படத்திற்கு தயாராகி கொண்டு இருக்கிறார்.