விஜய்மில்டன் இயக்கும் புதிய படம்

அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது, கோலிசோடா,பத்து எண்றதுக்குள்ள,,கடுகு, கோலிசோடா 2 ஆகிய படங்களை இயக்கியவர் ஒளிப்பதிவாளர் விஜய்மில்டன், இவற்றில் கோலிசோடா படம் மட்டும் வணிகரீதியாகவும், விமர்சனரீதியாகவும் வெற்றிபெற்ற படமாகும்.

கோலிசோடா 2 படம் வணிகரீதியாக வெற்றிபெறாததால் தொடர்ந்து படம் இயக்கும் வாய்ப்பு விஐய் மில்டனுக்கு கிடைக்கவில்லை கோலிசோடா-2

வெளியாகி  இரண்டாண்டுகள் முடிந்த நிலையில்.இப்போது அவருடைய புதிய படம் பற்றி நடிகர் சூர்யா அறிவிக்க இருப்பதாகதகவல் வெளியாகியுள்ளது.கன்னட  சினிமாமுன்னணி நடிகர் சிவராஜ்குமார் மற்றும் தனஞ்செயன்ஆகியோர் இணைந்து நடிக்கும் புதிய படத்தை விஜய்மில்டன் இயக்கவிருக்கிறார்
அப்படம் குறித்த அறிவிப்பைத்தான் சூர்யா வெளியிடவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.