ஜெய் பீம்’ படத்துக்குப் பின் தமிழின் மற்றொரு க்ளாசிக் திரைப்படம் ‘அமரன்’. கடைசி 10 நிமிடத்தில் என் இதயத்தை உலுக்கிவிட்டது” என நடிகை ஜோதிகா ‘அமரன்’ படத்துக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு:
இந்து ரெபேக்கா வர்கீஸ் உங்களின் தியாகமும், நேர்மறையான எண்ணமும் நெகிழவைக்கிறது. மேஜர் முகுந்த் வரதராஜன் ஒவ்வொரு குடிமகனும் உங்களைக் கொண்டாடுவதைப் பார்த்துக்கொண்டிருப்பீர்கள். உங்களைப்போன்ற வீரமும் தைரியமும் கொண்டவர்களாகவே எங்கள் பிள்ளைகளை வளர்க்க விரும்புகிறோம். ரசிகர்களே, தயவுசெய்து இந்த வைரத்தை தவறவீடாதீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.