உலகமெங்கும் ‘அமரன்’ படத்தின் வசூல் ரூ.200 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது.நவம்பர் 1 ஆம் தேதி முதல் 3 ஆம்தேதி வரை உலகளாவிய படங்களின் வசூல் பட்டியலில் ‘அமரன்’ படத்தின் வசூல் 7-ம் இடத்தை பிடித்து சாதனை புரிந்தது. அந்த சமயத்தில் இடம்பெற்ற ஒரே தென்னிந்திய படம் ‘அமரன்’ தான் என்பது குறிப்பிடத்தக்கது.
‘அமரன்’ வெற்றிக் குறித்து பத்திரிகையாளர்கள் மத்தியில் சிவகார்த்திகேயன் மிகவும் நெகிழ்ச்சியுடன் பேசினார்
நிறைய வசூல் செய்தால் மட்டுமே, இம்மாதிரியான படங்கள் எடுக்க தயாரிப்பாளருக்கு தோன்றும். அதைத் தாண்டி எனக்கு வசூல் முக்கியம். ஏனென்றால், என்னுடைய படங்களுக்கு பட்ஜெட் கிடைத்தால் மட்டுமே மக்களுக்கு இன்னும் பெரிய படங்களைக் கொடுக்க முடியும்.
இன்னும் நிறைய பெரிய கதைகள் சொல்ல வேண்டும் என நினைக்கிறேன். எனது முந்தைய படங்களின் படக்குழு அனைவருக்கும் நன்றி. அவர்களால் மட்டுமே இப்படியான ஒரு ‘அமரன்’ படத்தைக் கொடுக்க முடிந்தது. ’அமரன்’ கமர்ஷியல் வெற்றி மிகவும் முக்கியம்.