தமிழ்நாடு, இந்தியஅரசியல் நிகழ்வுகளை நினைவு படுத்தும்படியான காட்சிகளைச் அரசியல் தெளிவுடன் காட்சிப்படுத்தினாலே படம் பார்க்கும் பார்வையாளன் ரசித்து பார்க்கும் நிலைக்கு வந்து விடுவான் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது
தேவராஜின் ஒளிப்பதிவில் திரைக்கதையோட்டத்தின் பரிமாணங்கள் காட்சிகளாக விரிந்திருக்கின்றன.
இயக்குநர்கள் பாலமுரளிவர்மன், அஜயன்பாலா ஆகியோரின் வசனங்களில் சமகால அரசியல் காமெடியாக அல்லோல கல்லோலப் பட்டிருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் ஆதம்பாவா, அமீரை எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சிந்தித்தே காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.
அப்படி, ஓவ்வொரு பூவாக எடுத்து அவர் கோர்ததவை
ஓர் அழகான மாலையாக அமீர் கழுத்தில் விழுந்திருக்கிறது.