எழுத்தாளரும், நடிகருமான
அதற்காக, மதுரை மாவட்டம்உசிலம்பட்டி அருகிலுள்ள பெருங்காமநல்லூர் என்ற ஊரில் இப்படத்தின் பூஜை நடைபெற்றது.
ஆனால் அதோடு அப்படம் சம்பந்தமான வேலைகள்அப்படியே நின்று போனது.இது நடந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு குற்றப்பரம்பரை கதையை ஓடிடிக்கு வலைத் தொடராக ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் தயாரிப்பில்இயக்குபவர் சசிகுமார் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. சசிகுமார் இயக்கவிருக்கிறார் என்பதால் இது கவனம் பெற்றது. தொடக்கத்தில் பாரதிராஜா வசமிருந்த குற்றப்பரம்பரை பெயர் சசிகுமாருக்குக் கிடைக்கவில்லை என்றார்கள். அதன்பின் சமரசம் ஏற்பட்டு அந்தப் பெயர் சசிகுமாருக்குக் கிடைத்தது.
இத்தொடரில் சத்யராஜ்,தெலுங்கு நடிகர் ராணா டகுபதி, இந்தி நடிகர் அனுராக் காஷ்யப் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் உள்ளிட்டவர்கள் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்
இத்தொடரின் படப்பிடிப்பு அக்டோபரிலிருந்து தொடங்கும் என்று சொன்னார்கள்.அதன்பின் நவம்பரில் படப்பிடிப்பு என்றார்கள். ஆனால் நடக்கவில்லை. டெஸ்ட் ஷூட் எனப்படும் சோதனை படப்பிடிப்பு மட்டும் நடந்திருக்கிறது ஏன் படப்பிடிப்பு தொடரவில்லை என்கிற கேள்விகளோடு அத்தொடர் தயாரிப்பு சம்பந்தமானவர்களிடம் பேசியபோது
பாரதிராஜா குற்றப்பரம்பரை பெயரை விட்டுக்கொடுத்து சசிகுமார் தொடராக இயக்க ஒப்புக்கொண்டாலும் அவருக்குப் பின்புலமாக இருந்து குற்றப்பரம்பரை பற்றிய ஆய்வுகளைச் செய்த ரத்தினகுமார், இந்தப் பெயரில் தொடர் எடுக்க ஒப்புக்கொள்ளவில்லையாம்.
2024 பொங்கலுக்குப் பிறகு படப்பிடிப்பைத் தொடங்கவும் திட்டமிட்டிருக்கிறாராம். அதற்குள் நீதிமன்றம் போகாமலே சுமுகமாகப் பேசிமுடிக்கும் வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன என்கிறார்கள்.