ஹோம் மூவி மேக்கர்நிறுவனத்தின் சார்பில் சுஜாதா விஜய்குமார் தயாரித்துள்ள திரைப்படம் ‘சைரன்’. நடிகர் ஜெயம் ரவி இதுவரை நடித்திராத இரண்டுவிதமான தோற்றங்களில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. நடிகை கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக நடிகர் ஜெயம் ரவியுடன் இப்படத்தில் இணைந்துள்ளார். இவர்களுடன் யோகிபாபு, சமுத்திரக்கனியும்மேலும் அனுபமா பரமேஸ்வரன், அழகம் பெருமாள், அஜய், துளசி, சாந்தினி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
‘இரும்புத்திரை’, ‘விஸ்வாசம்’, ‘ஹீரோ’ படங்களில் திரைக்கதை ஆக்கத்தில் பங்கு பெற்ற அந்தோணி பாக்யராஜ் இந்த ‘சைரன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
பிப்ரவரி 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள சைரன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
சமுத்திரக்கனி எல்லா மொழிகளிலும், அனைத்துவித கதாப்பாத்திரங்களிலும் அசத்துகிறார். இந்தப் படத்திலும் நன்றாக நடித்துள்ளார் என்றார்.
இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் பேசும்போது,
புது இயக்குநர்கள், பெரிய ஹீரோக்களுக்கு செய்யும் படம் ஜெயிக்க வேண்டும். அப்போதுதான் இனி புது இயக்குநர்கள் பலர் வர முடியும்.
அழகம் பெருமாள் சாரை ஷீட்டிங்கிற்கு முதல் நாளில்தான் கூப்பிட்டேன். எனக்காக வந்தார். கனி அண்ணனிடம் கதை சொன்ன போதே, “இந்தக் கதை நிச்சயம் ஹிட்டுடா. இந்தக் கதையைத் தாங்க ஜெயம் ரவி இருக்கிறார். படம் நிச்சயம் ஜெயிக்கும்..” என்றார்
ஜீவி அண்ணாவின் மெலடி எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் மட்டும்தான் எனக்குத் தெரிந்த இசையமைப்பாளர், என்னை எப்போதும் உற்சாகப்படுத்திக்கொண்டே இருப்பார். இந்தப் படத்திற்காக 20 ட்யூன்களை தந்துள்ளார்.
இந்தப் படத்தில் எமோஷன்ஸ் மிக முக்கியம். அதைத் திரையில் கொண்டு வருவதும் முக்கியம். இசையை ஜீ.வி.தான் பண்ணனும் என ஆசைப்பட்டோம். அவரும் ஒத்துக் கொண்டார்.
இந்தப் படத்தில் பெண் கதாபாத்திரம் மிக முக்கியமானது. ஹீரோவுக்கு சரிசமமாக நிற்க வேண்டும். கீர்த்தி சரியாக இருப்பார் என்று நினைத்தோம், அதை நிரூபிக்கும்படி நடித்துள்ளார். அவர் ஒரு மிகச் சிறந்த உழைப்பாளி.
சமுத்திரக்கனி அண்ணனுக்கு இன்னும் ஒரு முக்கியமான பாத்திரம். நிஜத்தில் அவர் எப்போதும் சமூக கருத்துக்களை சொல்பவர். அவரை அதற்கு நேர்மாறாக நடிக்க வைத்துள்ளோம். “என்னைய போய் இப்படிப் பேச வைக்கிறீங்களே..?” என்பார்.இயக்குநர் அந்தோணி பாக்யராஜை இன்னும் நிறைய மேடைகளில், வெற்றி மேடைகளில் நீங்கள் பார்ப்பீர்கள். நான் புது இயக்குநர்கள்கூட நிறைய படங்களை செய்கிறேன் என்கிறார்கள். நான் ஒரு கருவி அவ்வளவுதான். இயக்குநரின் உழைப்புதான் படம் வெற்றி பெறக் காரணம்.இந்தப் படத்தில் ரெண்டு வேடங்களை கொஞ்சம் கஷ்டப்பட்டு செய்திருக்கிறேன். யோகிபாபுவும், நானும் டிவின்ஸ் மாதிரி ஒண்ணாவே இருந்தோம். ‘கோமாளி’ படம் மாதிரி இந்தப் படத்திலும் அழகான டிராவல் இருக்கு என்றார்.