என் மீது செருப்பை எறிய வேண்டும் என்று கூறிய நண்பரிடம் மன்னிப்புக் கேட்டு கொள்கிறேன். அன்று மேடையில் இருந்த வெற்றிமாறன் மற்றும் அமீர் இருவரும் சிரித்தார்கள் என்று பலரும் திட்டினார்கள். ஜோக்காக பேசியது, இரண்டு மூன்று வார்த்தை மேலே போய்விட்டது அவ்வளவே. மனதில் இருந்து பேசியதால் அப்படி ஆகிவிட்டது என்பதால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
ஒரு படத்தின் மேடையில் அதைப் பற்றி பேசும் போது, என் மனதில் ஆழத்தில் இருந்து தான் பேசுவேன். ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற ஒரு படம் வந்தது.
மனிதர்களையும், பிராணிகளையும் நேசிப்பவன் நான். சினிமாவையும், சினிமா மேடையையும் நேசித்துக் கொண்டே இருக்கிறவன். அதைத் தாண்டி வேறு வேலையே இல்லை. ஒவ்வொரு தருணத்திலும் துரோகத்தை அனுபவித்துக் கொண்டே இருக்கிறேன். எப்படி என்னால் சக மனிதனைப் பார்த்து அவ்வாறு பேச முடியும்.
என்னிடம் 40 ஆண்டுகளுக்கு படிக்க வேண்டிய புத்தகங்கள் இருக்கிறது. அவ்வளவு மனிதர்களைநேசிக்க வேண்டியது இருக்கிறது, நிறைய ஊர்களுக்கு செல்ல வேண்டியது இருக்கிறது. உங்கள் அனைவரின் முன் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்டு, உங்களை கடவுள் ஆக்குகிறேன்” என்று மிஷ்கின் பேசினார்.