நாயகர்களாக டிட்டோ மற்றும் மகேஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.அவர்களின் நிறம், தோற்றம் ஆகியனவற்றிற்கும் திரைக்கதையில் இடம் இருக்கிறது.
டிட்டோவின் கதாபாத்திரமும் நடிப்பும் நேர்மறையின் உச்சமாக அமைந்து நெகிழ்வை ஏற்படுத்துகிறது.
மகேஷ் நடிப்பை காதல் வரும் முன் காதல் வந்த பின் என இருவகையாகப் பிரிக்கலாம்.இரண்டிலும் இயல்பாக நடித்திருக்கிறார்.
நாயகி தீப்சிகாவுக்கு, தொண்ணூறு காலகட்டப் பெண்களின் நிலையை எடுத்துக்காட்டும் விதமான கதாபாத்திரம்.அதில் மிகச் சரியாக நடித்திருக்கிறார்.
கல்லூரி முதல்வராக நடித்திருக்கும் மதுமிதா, பேராசிரியராக நடித்திருக்கும் சாம்ஸ் ஆகியோர் சிரிக்க வைக்கிறார்கள்.
டிட்டோவின் அண்ணனாக நடித்திருக்கும் தயாரிப்பாளர் மணிபாய் அவருடைய மனைவியாக நடித்திருக்கும் நிஜமனைவி மற்ற வேடங்களில் நடித்திருக்கும் சாப்ளின் சுந்தர், திடியன், லட்சுமி ஆகியோர் கவனிக்க வைக்கிறார்கள்.
டிஎஸ்.முரளிதரன் இசையில் பாடல்கள் கேட்கலாம்.கதை நடக்கும் காலகட்டத்துக்கேற்ற பாடல்களைக் கொடுக்க முயன்றிருக்கிறார்.
பின்னணி இசை அமைக்கும் பணியை சிற்பியிடம் கொடுத்திருக்கிறார்கள்.அவரும் தொண்ணூறு காலகட்டத்தை மனதில் வைத்து இசையமைத்திருக்கிறார்.
பால் லிவிங்ஸ்டன் மற்றும் பாலா பழனியப்பன் ஆகியோர் ஒளிப்பதிவாளர்களாகப் பணிபுரிந்திருக்கிறார்கள்.வசனக் காட்சிகளில் தாழ்வில்லை. பாடல்காட்சிகள் மிகவும் இரசிக்கும்படி அமைந்திருக்கின்றன.
திரைக்கதை வசனம் எழுதியிருக்கும் சிந்துநதிபூ பட புகழ் செந்தமிழன், தொண்ணூறு காலகட்டத்தைக் கண் முன் கொண்டு வரும்படியாகக் காட்சிகளையும் வசனங்களையும் எழுதியிருக்கிறார்.
கதை எழுதி இயக்கியிருக்கிறார் சகாயநாதன். மூன்று முக்கிய கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு உண்மை,நேர்மை,நட்பு,காதல்,பழியு