ஜோஷ்வா இமைபோல் காக்க – திரைவிமர்சனம்.

நாயகியை வில்லன்களிடமிருந்து நாயகன் ‘இமைபோல்’ காப்பதே படத்தின் ஒருவரிக் கதை. படம் பார்க்க வந்தவர்களை ஒருவரிக் கதை மகிழ்வித்ததா என்பது படத்தின் சொல்லப்படாத மற்றொரு ஒருவரிக் கதை.தொழில்முறை கொலையாளி ஜோஷ்வா (வருண்) நிகழ்ச்சியொன்றில் வழக்கறிஞர் குந்தவியை (ராஹீ) பார்க்கிறார். கண்டதும் காதல் வர, அவரிடம் சென்று ஆங்கிலத்தில் ஆட்டோகிராஃப் கேட்கிறார். அடுத்து என்ன… காதல் பாடல்கள்தான். குந்தவியைப் பொறுத்தவரை அமெரிக்க நீதிமன்றத்தில் போதைப்பொருள் கடத்தல் தாதாவுக்கு எதிரான வழக்கில் ஆஜராகிறார். அதனை தடுக்க அவரை கொலை செய்ய அவரது ஆதரவாளர்கள் முயற்சிக்கின்றனர்.

காதலியைகாப்பாற்ற பாதுகாப்பாளராக  களமிறங்கும் ஜோஷ்வா அவரை கொலைகாரர்களிடமிருந்து எப்படி மீட்டார் என்பதை பல்வேறு திருப்பங்களுடன் சொல்ல முயற்சிக்கிறது திரைப்படம்
இமைமூடி திறக்கும் போதெல்லாம் சண்டை சண்டை காட்சிகள் இதில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கையை யுடன்  பார்வையாளர்களும் இருக்க வேண்டிய கட்டாயம். பெரும்பாலான திரைநேரத்தை சண்டைக்காட்சிகள் ஆக்கிரமிக்க, மீதி நேரத்தில் காதலும், பாடல்களும் புகுந்துகொள்ள கதையை தேட வேண்டிய கட்டாயம் பார்வையாளனுக்கு ஏற்படுகிறது.  காதலையும், ஆக்‌ஷனையும் தனக்கேயுரிய தனித்தன்மையுடன் தனித்தனியே அழகியலாக தனது படங்களில் காட்சிப்படுத்திய இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இப்படத்தில் இரண்டையும் கலந்து கொடுத்துள்ளார்.
பரபரப்பான ஆக்‌ஷன் காட்சிகள் நடுவே திடீரென காதல் காட்சியும், ரொமான்ஸுக்கு நடுவே திடீரென வில்லன்கள் பாய்வதுமாக முழுமையின்றி நகரும் காட்சிகள் வெந்தும் வேகாதவை. கத்தியால் குத்துப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் ஜோஷ்வா “என்ன இப்டியே சாக விட்றாத, உன் மடியிலவேணா படுத்து உயிர விட்றேன்” என்கிறார். பொருந்தாத காட்சியும், வசனமும் வலிந்து திணிக்கப்பட்ட காதலுக்கு ஓர் உதாரணம்.ஆங்கில வசனங்களும், சில காதல் காட்சிகள், அதிகமான க்ளோசப் ஷாட்ஸும் கவுதம் மேனனுக்கே உரிய தனித்துவம்
உயர்தரநாயகியும், அந்த வாழ்வோடு பிணைந்த நாயகனும் நல்லவர்கள். ஆனால், படத்தின் கொடூர வில்லன்கள் எல்லாம் ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதியில் இருப்பவர்கள். ஆங்கிலம் தெரியாத, நாகரிகமற்றவர்கள் என்கிற பிற்போக்கு தன கருத்து திணிப்பு உண்டு.தேர்ந்த ஆக்‌ஷனில்
கவனம் பெறும் வருணின் நடிப்பு உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் காட்சிகளில் வறண்ட பிரதேசமாக இருக்கிறது.அழுகை, காதல், மீட்பர் ஆணைச் சார்ந்திருக்கும் கதாபாத்திர வடிவமைப்பில் புதுமையில்லை என்றாலும் நாயகி ராஹீ நடிப்பில் குறையில்லை. குழப்பமானகதாபாத்திரத்தில்
கிருஷ்ணா சில காட்சிகளில் வந்தாலும்நடிப்பில் முத்திரை பதிக்கிறார். சிறப்புத் தோற்றத்தில் மன்சூர் அலிகான் வந்து செல்ல, திவ்ய தர்ஷினி கதாபாத்திரம் தேவையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளது.
கார்த்திக்கின் பின்னணி இசை சில இடங்களில் இரைச்சலாக இருந்தாலும், ஆக்‌ஷனில் வேகமெடுக்கிறது. க்ளோசப், வித்தியாசமான கோணங்கள், முக பாவனையின் அசைவுக்கு ஏற்றபடி நகரும் கேமராவில் எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவு தனித்து தெரிகிறது. ஆண்டனியின் தேர்ந்த கட்ஸ் கச்சிதம்.படத்துக்கு எந்த வகையிலும் பயனளிக்காத பின் கதை, வீணடிக்கப்பட்டிருக்கும் கிருஷ்ணா கதாபாத்திரம், சம்பிரதாயத்துக்காக எழுதப்பட்ட திருப்பம், அழுத்தமில்லாத காதல் என அவசர அவசரமாக தயார் செய்யப்பட்ட கல்லூரி கால கடைசி கடமைக்காகதிணிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் திரையிடப்பட்டிருக்கும் மால்களில்கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான ‘வாரணம் ஆயிரம்’ மறு வெளியீட்டில்ஓடிக்கொண்டிருக்கலாம். இரண்டுமே அவரது படங்கள்தான் என்பது காலம் செய்த கோலம்!