புதுமுக நாயகன் ஜெகவீரும் நாயகி மீனாட்சி கோவிந்தராஜனும் சிறுவயது முதலே நண்பர்கள்.வளர்ந்து கல்லூரி வாழ்க்கையை முடித்த பின்பும் இருவரும் இணைந்து திருமணங்களுக்குப் புகைப்படம் காணொலி எடுக்கும் நிறுவனம் நடத்திவருகிறார்கள்.அவர்கள் இருவரும் நண்பர்களாகவே தொடர்ந்தார்களா? காதலர்களாக மாறினார்களா? திருமணத்தில் இணைந்தார்களா? என்கிற கேள்விகளுக்கான விடையாக விரிந்திருக்கிறது திரைக்கதை.
அறிமுக நாயகன் ஜெகவீர்,புதுமுகங்களுக்குரிய எவ்விதத் தடைகளுமின்றி மிக இயல்பாக நடித்திருக்கிறார்.
மீனாட்சி கோவிந்தராஜனுக்கு சிறப்பான வேடம்.அதை மிக அநாயசமாகக் கையாண்டு நற்பெயர் பெறுகிறார்.அவருடைய அழகும் இளமைத்துள்ளலும் நன்றாகக் கைகொடுத்திருக்கிறது.
நண்பராக வரும் பாலசரவணன் நன்றாகச் சிரிக்க வைக்கிறார்.
லத்திகா,விநோதினி,ஜெயப்பிரகாஷ்,
ஆனந்த கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு வண்ணமயமாகவும் கொண்டாட்ட மனநிலையிலும் அமைந்து காட்சிகளுக்கு இனிமை சேர்த்திருக்கிறது.
சுசீந்திரன் எழுதி இயக்கியிருக்கிறார்.தொண்ணூறுகளி
கருத்தியலாக இப்போது இருக்கும் நிலையிலிருந்து பல படிகள் முன்னோக்கியிருக்கும் அதேவேளை திரைமொழிக்கேற்ற அம்சங்களைக் கலந்து படத்தை ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன்.