எஸ்.சாம்இயக்கத்தில்,தேவ்,தேவி
திவாகர்,யுவராஜ்,விஜே நிக்கி,தீபிகா,தீப்சன்,சுப்ரு,
சுவாதி நாயர்,பூஜா ஃபியா,சுபா கண்ணன்,கலைக்குமார்
உள்ளிட்டோர் நடித்துள்ள படம் “யோலோ”எம்.ஆர்.மோசன் பிக்சர்ஸ் சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், மனதை இலகுவாக்கும் ரொமான்ஸ் காமெடி ஜானரில், ஃபேண்டஸி கலந்த எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் “யோலோ”.
வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு,ஆகஸ்ட் 29 அன்று சென்னையில் நடைபெற்றது நிகழ்வில்.
இயக்குநர் ஆர்.கே.செல்வமணி….,
இந்த விழாவிற்கு எதுவும் தெரியாமல்தான் வந்தேன். வந்த பிறகுதான் தெரிகிறது இது என் குடும்பவிழா என்று.ஹீரோ தேவ் எனக்குச் சின்னவயதிலிருந்து தெரியும்.அவரை எனக்கு பூர்ணேஷ் எனத்தான் தெரியும், படத்திற்காக தேவ் என மாறியுள்ளார்.அவரது மாமா டெல்லி பாபு, உலகத்தின் மிகச்சிறந்த மனிதர்களில் ஒருவராக இருந்தார்.அவருக்குத் தீமையே தெரியாது, நன்மைதான் செய்வார்.மிகச்சிறந்த இயக்குநர்களை, மிகச்சிறந்த படைப்புகளை உருவாக்கிய தயாரிப்பாளர். காலம் அவரை நம்மிடமிருந்து பிரித்துவிட்டது.அவர் தன் மகனை ஹீரோவாக்க வேண்டுமென்று பலமுறை சொல்லியுள்ளார்.இன்று அந்த ஆசை நிறைவேறியுள்ளது மகிழ்ச்சி.அவருடைய ஆசி உனக்கு எப்போதும் உண்டு.
“YOLO” என்றால் என்னவென்று தெரியவில்லை. இங்கு வந்த பிறகுதான் கேட்டேன் — You Only Live Once என்றார்கள்.உண்மைதான்,நாம் ஒரு முறைதான் வாழ்கிறோம்,அதை அழகாக வாழ்வோம்.
இந்தப்படத்தில் எல்லோரும் இளமையாகஇருக்கிறார்கள்.
எனக்கு முதல்படத்துக்குச் சம்பளம் 14,000 ரூபாய்தான். ஆனால் அடுத்தபடத்துக்குச் சம்பளம் ஒரு கோடி ரூபாய். அதனால் முதல்படத்துக்குச் சம்பளத்துக்கு அலையாதீர்கள்.முதல்படத்தோட பட்ஜெட் என்னவோ அதுதான் உங்கள் சம்பளம்.ஏனெனில் என்னை நம்பி ஒரு தயாரிப்பாளர் 1 கோடி போடுகிறார் என்றால் அதுதான் என் சம்பளம்.அப்படி இயக்குநர்கள் நீங்கள் நினைத்தால்தான் அடுத்து ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கமுடியும் என்றார்.
புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் அவர்களுக்கு “கேப்டன்” எனும் பெயர் நிரந்தரமாக அமையக் காரணமானவர். அவருடைய மறைவுக்குப் பின்னாடியும் ஓடிய கேப்டன் பிரபாகரன் படத்தை தந்தவர்.இத்தனை ஆண்டுகள் கழித்தும் இன்றைக்கும் திரையிடப்பட்டு ஒரு மாபெரும் வெற்றி அடைகிறது என்றால் அதற்குக் காரணம் அந்த படத்தின் தரம்.என்னுடைய முதல்படம் மௌனம் பேசியது முதல் இப்போ வரைக்கும் நிறைய அசிஸ்டன்ட் டைரக்டர்ஸ் என்கிட்ட இருந்து வெளியில் போயிருக்கிறார்கள். அதில் பாதி பேரின் பெயரே எனக்குத் தெரியாது. “சார், உங்களோடுதான் ஒர்க் பண்ணேன்” என சொன்னால் “அப்படியா, சரி ஓகே” அப்படின்னு சொல்வேன். ஏன்னா ஒரேஒரு ஷெட்யூலில் மட்டும்தான் ஒர்க் பண்ணியிருப்பான்.அடுத்த ஷெட்யூலில் இருக்கமாட்டான். அப்படிப்பட்டவர்கள் ஒரு 30–40 பேர் இருக்கிறார்கள். ஆனால் வெற்றி பெற்றவர்கள் மிகக்குறைவுதான். அதில் சாம் ஒருவர்.
எல்லாரும் கனி பற்றித்தான் சொன்னார்கள். அவன் இளகிய மனசுக்காரன்.பருத்திவீரன் படப்பிடிப்பில் யாரையும் திட்டக்கூட மாட்டான்.இப்போது அவனை நடிகனாகப் பார்க்கப் பிரமிப்பாக இருக்கிறது. அவனுடைய வளர்ச்சிக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.இந்தப்படத்தின் ஹீரோ பற்றி எனக்கு பெருசா ஒன்றும் தெரியாது.பொதுவாக ஒரு பழமொழி சொல்வார்கள்: “ஊராம் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தான் பிள்ளை தானா வளரும்?” என்று. அவருடைய மாமா நிறைய புதியஇயக்குநர்களை அறிமுகம் செய்திருக்கிறார். மரகத நாணயம் எடுத்த சரவணன்,பேச்சலர் எடுத்த சதீஷ் — இவர்களை எல்லாம் அறிமுகப்படுத்தியதால் தான் இன்று மகேஷ் என்ற தயாரிப்பாளர் மூலமாக தேவ் ஹீரோவாகி இருக்கிறார்.
தேவ் தன் அப்பா அம்மா இந்தமேடையில் இல்லை, அவர்கள் இருக்கனும்னு ஆசைப்பட்டேன்னு சொன்னார். வாழ்க்கை அப்படி நம்ம நினைப்பதுபோல நடக்காது. அப்படி நினைத்த மாதிரி நடந்ததுன்னா அது வாழ்க்கையே இல்லை.பொதுவாக சொல்வார்கள் — நீ போகும் பாதையில் இடையூறு இல்லையென்றால் அது உனக்கான பாதை இல்லை.நீ போட்ட பாதையில் இடையூறு இருந்தால் அதைச் சரி பண்ணினால்தான் அது உன் பாதையாக இருக்கும்.
நிச்சயமாக இந்தப்படம் உங்களுக்கு ஒரு புது அனுபவத்தைத்தரும் என நம்புகிறேன். சாம் என்கிட்டயும் ஒர்க் பண்ணியிருக்கான்,கனிகிட்டயும் ஒர்க் பண்ணியிருக்கான்.ஆனா இருவரின் பாணியையும் பின்பற்றாமல் புதுசாக படம் எடுத்திருக்கான். ஒவ்வொன்றையும் கவனமாகச் செய்துள்ளான். டிரெய்லரில் அது தெரிகிறது என்றார்.
இயக்குநர் சாம்……
அமீர் சார் ஒரு சிங்கம் மாதிரி. அவருடன் வேலை செய்வது சவாலானதாக இருந்தது.அவர் கடின உழைப்பாளி. தயாரிப்பாளரின் பணத்தை வீணாக்கக்கூடாது என்பதை அவரிடம்தான் கற்றுக்கொண்டேன்.அவரால்தான் புதுமுகங்களை வைத்து படம் எடுக்க தைரியம் வந்தது.நான் சோர்வாக இருக்கும் போதெல்லாம் அமீர் சாரும், கனி சாரும் என்னை ஊக்கப்படுத்தினார்கள்.
கனி சார் எந்த ஒரு நொடியையும் வீணாக்கமாட்டார். அவரிடமிருந்து அதைக் கற்றுக்கொண்டேன். “எப்போதும் இயங்கிக்கொண்டே இருக்க வேண்டும்” என்பார். அவர் இந்தப்படத்திற்குப் பெரிய ஆதரவாக இருந்தார். கதாநாயகியாக நடிக்கபலரைத் தேடி கடைசியாக தேவிகாவை ஒப்பந்தம் செய்தோம். அவர் மிகச்சிறப்பாக நடித்துள்ளார்.
செப்டம்பர் 12 அன்று திரைக்கு வருகிறது என்றார்.
இயக்குநர், நடிகர் சமுத்திரகனி பேசுகிற போது…..
இறைவனுக்கு நன்றி.மிக மகிழ்ச்சியான தருணம். என் படத்தை விட அதிக சந்தோசமாக உள்ளது.அமீர் அண்ணனுக்கு நன்றி சொல்லவேண்டும்.பருத்திவீரன் படத்தில் தான் நானும் சாமும் சந்தித்தோம். அமீர் அண்ணன் எங்களிடம் நிறைய தாக்கத்தை ஏற்படுத்தினார்.
சாமுக்கும் எனக்கும் இனிமையான பயணம். அண்ணனிடமிருந்து வந்த பிறகு “இவனை விட்டு விடக்கூடாது” என நினைத்து என்னுடன் இணைத்துக் கொண்டேன்.அவன் எனக்காக நிறையச் செய்துள்ளான். இந்தமேடை அவனுக்கு ரொம்ப லேட்டாக கிடைத்துள்ளது.அதனால் இந்தப்படத்திற்காக அவனுடன் நிற்கவேண்டும் என நினைத்தேன்.
இந்தப்படம் கண்டிப்பாகப் பெரிய வெற்றி பெறும். ஏனெனில் அவ்வளவு உழைப்பைச் செய்திருக்கிறார்கள். படத்தில் உண்மையும், உணர்வும் இருக்கிறது.இந்த திரைப்படத்தில் நடித்த அனைவருக்கும் வாழ்த்துகள்.நண்பன் மகேஷ் இந்தக்குழுவின் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி. இப்படம் பெரிய வெற்றி பெற வாழ்ததுகள்
இவ்வாறு அவர் பேசினார்.