கேரள சட்டமன்றத்தில்” மார்கோ” மலையாள படத்திற்கு எதிர்ப்பு

சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘மார்கோ’. 100 கோடிக்கும் மேல் வசூலித்த இந்த படம்தற்போது ஓடிடியில் வெளியாகி அதிலும் வரவேற்பை பெற்றுள்ளது. 

படம் வெற்றி பெற்றாலும் படத்தில் இடம்பெற்ற வன்முறை காட்சிகளுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.இந்த நிலையில் கேரள சட்டசபையில் பேசிய முதல்வர் பினராயி விஜயன் கொலை செய்பவர்களை ஹீரோக்களாக சித்தரிப்பதா என்று ‘மார்கோ’ படத்தை விமர்சித்து உள்ளார்.

கோழிக்கோட்டில் பத்தாம் வகுப்பு மாணவன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கேரள சட்டசபையில் நேற்று காங்கிரஸ் எம்எல்ஏ ரமேஷ் சென்னித்தலா ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் மீது முதல்வர் பினராயி விஜயன் பேசும்போது…

சமீபகாலமாக வெளியாகும் பல சினிமாக்களில் வன்முறை காட்சிகள் அதிகமாக உள்ளன. ரவுடிகளை படங்களில் மகான்கள் போல காட்டுகின்றனர்.

படங்களில் அதிக கொலைகள் செய்பவர் ஹீரோவாக அங்கீகரிக்கப்படுகிறார். அதைப்பார்த்து மாணவர்களும் ரவுடிகளாக மாறுகின்றனர். சமீபத்தில் வெற்றிகரமாக ஓடிய (மார்கோ) ஒரு படத்தை பார்த்து சில பள்ளி மாணவர்கள் ரவுடி கோஷ்டியில் சேர்ந்ததாக போலீஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது என்றார்.
Comments (0)
Add Comment