பெரிய பெரிய வேலைகளைச் செய்துவிட்டு ஒன்றுமே தெரியாதது போல் முகத்தை வைத்துக் கொள்வது விஜய் ஆண்டனிக்குக் கைவந்த கலை.அதற்குத் தகுந்த வேடம் இது என்பதால் எல்லாக் காட்சிகளிலும் பிரமிப்பூட்டுகிறார்.
நாயகி திருப்திக்கு நல்ல அறிமுகப்படம்.கொடுத்த வேடத்தை நன்றாகப் புரிந்து நடித்திருக்கிறார்.
வில்லனாக நடித்திருக்கும் காதல் ஓவியம் கண்ணன், சமகால நிஜ அரசியல்தரகரை நினைவுபடுத்தும் வேடத்தை ஏற்று அதனை சாரியாக செய்திருக்கிறார்.அவருடைய வேடம் மூலம் நாட்டில் இப்படியெல்லாம் நடக்கிறதா? என்று பொது சமூகம் தெரிந்து கொள்ள முடியும்.
ஒளிப்பதிவாளர் ஷெல்லி காலிஸ்ட், இந்தக்கதைக்கு என்ன தேவை என்பதை அறிந்து காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.
விஜய் ஆண்டனியே இசையமைத்திருக்கிறார்.
அருவி, வாழ் ஆகிய படங்களை இயக்கிய அருண் பிரபு எழுதி இயக்கியிருக்கிறார்.
அரசியல் தரகர்களை தமிழ்நாடு மற்றும் இந்தியா எனப் பிரித்ததிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரின் பின்புலம் மற்றும் நோக்கம் ஆகியவற்றை காட்சிபடுத்தியது பெரும் வரவேற்புக்குரியன. லஞ்சம்ஊழல் ஆகியனவற்றைத் தாண்டி இருபெரும் அரசியல் சித்தாந்த மோதலை அடிநாதமாக வைத்திருப்பது அவருடைய அரசியல் புரிதல், அறிவை, ஆளுமையை உறுதிப்படுத்துகிறது.
மக்கள் எப்போதும் ஏதாவது ஒரு நடிகர் நம்மைக் காக்கமாட்டாரா? என்றுதான் நினைப்பார்கள் என்பது உள்ளிட்ட பல வசனங்கள் சமகால அரசியலை அம்பலப்படுத்துவது படத்துக்குப் பெரும்பலமாக அமைந்திருக்கின்றன.