சூர்யாவின்”கருப்பு” க்கு வந்த சோதனை RJ.பாலாஜியின் பிடிவாதம்

ரெட்ரோ படத்தைத் தொடர்ந்து சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் கருப்பு. ஆர்.ஜே.பாலாஜி இயக்குகிறார். இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் சூர்யாவுடன் த்ரிஷா, ஷிவதா, அனகா மாயா ரவி, இந்திரன்ஸ், நட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு, இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
2024 ஆம்ஆண்டு நவம்பரில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.அதனால் இவ்வாண்டுஅக்டோபர் மாதம்  படம் வெளியீடு என கூறப்பட்டது.
இப்படத்தின் இணைய ஒளிபரப்பு உரிமை விற்பனை முடிவாகததால் வெளியீட்டுதேதியை உறுதி செய்யாமல் இருக்கிறார்கள் என்பதுதான் திரையுலக வட்டாரங்களில் உலவும் தகவல்.

அது என்ன?

இப்படம் தொடங்கும்போது, ஆர்.ஜே.பாலாஜி திரைக்கதை எழுத வருடக் கணக்கில் நேரம் எடுத்துக் கொள்வார். ஆனால் படப்பிடிப்பை எழுபது முதல் எண்பது நாட்களுக்குள் முடித்துவிடுவார்.சூர்யா போன்ற ஒரு பெரிய நடிகரை வைத்து இவ்வளவு விரைவாகப் படத்தை எடுத்து முடித்துவிட்டாலே அப்படத்தில் இலாபம் பார்த்துவிடலாம்.

இதற்கு முந்தைய படமான சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு சுமார் தொண்ணூறு நாட்கள் இருக்கும் என்று சொன்ன இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்,எண்பது நாட்களிலேயே படப்பிடிப்பை முடித்துவிட்டார்.

ஆர்.ஜே.பாலாஜியும் கதை,படப்பிடிப்பு நாட்கள் குறித்து கொடுத்த உறுதிமொழி காரணமாகவே அவர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் என்று சொல்லப்பட்டது.ஆனால் எதிர்பார்த்ததற்கு மாறாக படப்பிடிப்பு தொடங்கியதிலிருந்தே ஆர்ஜே.பாலாஜிக்கும்

தயாரிப்புத் தரப்புக்கும் நிறைய கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டுவிட்டன.படப்பிடிப்புக்காக கேட்கிற வசதிகளை தயாரிப்புத் தரப்பு செய்துதரவில்லை என்பது இயக்குநர் தரப்பின் குற்றச்சாட்டு.
சூர்யா நடிக்கும் படத்தில் கேட்கும் வசதிகளை தயாரிப்புத்தரப்பு செய்யவில்லை என்பதில் உண்மை இருக்க வாய்ப்பில்லை என்று கூறப்பட்டது.இந்நிலையில் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக் கட்ட வேலைகள் நடந்து வந்தது.

படத்தை முழுமையாகத் தொகுத்துப் பார்த்தபோது ஆர்.ஜே.பாலாஜிக்கு படத்தில் திருப்தி இல்லை.அதனால் சுமார் பதினைந்து நாட்கள் முதல் இருபது நாட்கள் வரை திரும்ப படப்பிடிப்பு நடத்தவேண்டும் என்று அவர் சொல்லியிருக்கிறார்.

அதிர்ந்துபோன தயாரிப்புத் தரப்பு இதைஏற்றுக்கொள்ளவில்லை.
இருக்கிற காட்சிகளே நிறைவாக இருக்கின்றன,இவற்றை வைத்தே படத்தை முடித்துக் கொடுங்கள்
என்று சொல்லிவிட்டார்களாம்.

ஆனால் ஆர்.ஜே.பாலாஜி திருப்தியடையாமல் மீண்டும் படப்பிடிப்பு நடத்தியாக வேண்டும் என்கிறாராம்.இதுதொடர்பான பேச்சுகள்நடந்துகொண்டிருக்கின்றன என்கிறார்கள்.

Comments (0)
Add Comment