இந்த நிகழ்வில் பேசிய விஷ்ணு விஷால்
FIR படத்தில் பிரவீன் என்னுடன் நடித்தார். அப்போது மூன்று கதை கூறினார், அதில் ஒன்று தான் இது. ஒரு வித்தியாசமான படமாக கொடுக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ செய்திருக்கிறோம். இது மிக நீண்ட பயணம். கோவிட் சமயத்தில் இந்தக் கதையை கேட்டேன். அங்கிருந்து எடுத்துக் கொண்டால் ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது. இவ்வளவு காலம் பொறுமையாக ஒரு இயக்குநர் இருந்து நான் பார்த்ததில்லை. நடுவில் வேறு இரண்டு படங்களுக்காக ஆறு மாதம் இடைவேளை எடுப்பதாக சொன்னேன். ஆனால் அது இரண்டு வருடமாக மாறியது. அதனால் தான் இந்தப் படம் இவ்வளவு தாமதமாகிவிட்டது.
தெலுங்கில் இப்படத்தை ரவி தேஜா வைத்து பைலிங்க்குவலாக எடுக்க முயற்சித்தோம். அதுவும் நடக்கவில்லை. சரி இதை தமிழில் எடுப்போம், பேன் இந்தியா என்ற வார்த்தை இப்போதெல்லாம் மிஸ்யூஸ் செய்யப்படுவதாக தோன்றியது. எனக்கும் ஆரம்பத்தில் இப்படத்தை பிற மொழி நடிகர்களை சேர்த்து பேன் இந்தியா படமாக எடுக்கலாம் எனத் தோன்றியது. ஆனால் அது வேண்டாம் தமிழில் மட்டுமே எடுக்கலாம் என முடிவு செய்தேன். சென்ற நவம்பரில் படப்பிடிப்பு துவங்கி ஒரு வருடத்திற்குள் படத்தை வெளியிடுகிறோம். ஆர்யன் என் மகனின் பெயர். ஐந்து வருடம் முன்பு அவரிடம் ஆர்யன் என்ற பெயரில் படம் எடுக்கப் போகிறேன் என சொன்னேன். ஒருவழியாக அவர் பெயரில் இருக்கும் படம் வெளியாகப் போகிறது. அவர் பெயரில் ஒரு நல்ல படம் கொடுத்திருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி. இந்தப் படம் பற்றி அவருக்கு இப்போது புரியாது. சில வருடங்கள் கழித்து பார்க்கையில் அவருக்கு புரியும்.” என்றார்.