குடும்பங்களின் சூழ் நிலை, அவர்களின் எண்ண ஓட்டம் இவற்றை மையமாக கொண்ட கதையை காதல் உணர்வுடனும், திரைக்கதையை சுவாரசியம் குறையாமலும் பின்னப்பட்டிருக்கும் திரைப்படம்
கோபத்தை கூட அமைதியாக காட்டும் வேடம் விக்ரம் பிரபுவுக்கு. ஒரு பெண்ணின் மேல் வைத்த காதல் தோல்வி அடைந்த நிலையில் திருமண ராசி இல்லாதவர் என்று உறவுகளே சொல்லும் வேடத்தில் நடித்திருக்கிறார்.
அதேபோல் நிச்சயிக்கப்பட்ட நாயகி சுஷ்மிதா பட்டும் கை நழுவிப் போய்விட, அவர் தங்கை மீனாட்சிக்கு தான் மீது அரும்பும் காதலை ஏற்கவும் முடியாமல், நிராகரிக்கவும் முடியாமல் தவிக்கும் போதும் அற்புதமாக உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறார்.
முன்பாதியில் இருக்கும் சுவாரசியம் பின்பாதியில் குறைகிறது. பின்பாதியில் கதையே இல்லாததால், சத்யராஜை சிறப்புத் தோற்றத்தில் மைக் பிடிக்க வைத்திருக்கிறார்கள். ஆனால், அதுவும் எதிர்பார்த்த அளவு எடுபடவில்லை.