பொன் மகள் வந்தாள்-குறுந்திரை விமர்சனம்

வெள்ளி திரை, சின்னத்திரை தற்போது மூன்றாவது திரையாக குறுந்திரை உதயமாகியுள்ளது

தொலைக்காட்சி தொடர் போன்று தணிக்கை செய்யப்படாத” பொன்மகள் வந்தாள்” குறுந்திரைபடம் அமேசான் பிரைம்OTT தளத்தில் 29.05.2020 அன்று வெளியானது
காவல்துறை சொல்லும் குற்றச்சாட்டுகள் அதன் மீதான நடவடிக்கைகள் ஆகியன அனைத்தும் எல்லா நேரங்களிலும் அப்படியே உண்மையாகிவிடாது என்பதை உறக்கக்சொல்லியிருக்கிறது எந்தவித லாஜிக்கும் இன்றி பொன்மகள் வந்தாள்.

காவல்துறையால் இட்டுக்கட்டிப் புனையப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்ட ஒரு பெண்ணின் வழக்கை 15 ஆண்டுகளுக்குப் பின் நீதிமன்ற விசாரணைக்கு கொண்டுவருகிறார்

அட்வகேட் வெண்பா ( ஜோதிகா ).
அவருக்கு துணையாக டிராபிக்ராமசாமி போல செயல்படும் பெட்டிசன் பெத்துராஜ் ( பாக்யராஜ்) இருக்கிறார்.

நீதிபதியாக பிரதாப்போத்தன், அவருடைய உதவியாளராக பாண்டியராஜன், எதிர்த்தரப்பு வக்கிலாகபார்த்திபன், காவல்துறை அதிகாரியாக சுப்புபஞ்சு, வழக்கின் பின்புலமாக தியாகராஜன் ஆகியோர் இருக்கிறார்கள்.

இந்த வழக்கு என்னவாகிறது? என்பதுதான் திரைக்கதை.
ஜோதிகா ஏற்றுக்கொண்ட பாத்திரங்களுக்கு நியாயமாக நடித்திருக்கிறார். நீதிமன்றத்தில் பார்த்திபனுக்கு அவருடைய பாணியிலேயே பதிலடி கொடுக்கும் காட்சிகள் சிறப்பு.

பாக்யராஜ், பிரதாப்போத்தன், தியாகராஜன் உள்ளிட்டோர் தங்கள் பங்கைக் குறை வைக்காமல் செய்திருக்கிறார்கள்.
கதைக்களம் ஊட்டி என்பதால் காட்சிகளில் குளுமை

கோவிந்த்வசந்தாவின் இசை மென்மையாக வருடிச் செல்கிறது.

நீதிமன்றக் காட்சிகள் போரடிக்காமல் கொண்டு சென்றிருப்பது படத்தின் பலம்.

அதிகார வர்க்கம் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்யும் என்பதை  பார்வையாளர்களுக்கு கடத்தியிருக்கிறார்கள்.

ஜோதிகா தனது முதல் வழக்காக இந்த வழக்கு எடுத்திருப்பதன் பின்னணி மற்றும் ஓரிடத்தில் தேங்கி நிற்கும் வழக்கு மீண்டும் புறப்படுவது ஆகியன சுவாரசியம்.

குறைகள் இருந்தாலும் நகைச்சுவைகள், சண்டைக்காட்சிகள் ஆகிய  பொழுதுபோக்கு அம்சங்கள் இன்றி ஒரு உணர்வு பூர்வமான கதையைப் போரடிக்காமல் சொல்லி வெற்றி பெறுகிறார் இயக்குநர் பிரட்ரிக்.

#jhothikaPonmagal VanthaalReviewSuriya
Comments (0)
Add Comment