ஒரு அமைதியான காதல் கதை பல திருப்பங்களுடன் நிச்சயதார்த்தத்தைக் கடந்து, தற்போது திருமணத்துக்காக காத்துக்கொண்டிருக்கிறது.
ஆகாஷ், சினேகா ஆகிய இருவரும் சிங்கப்பூரில் ஒன்றாகப் படித்தவர்கள்.
‘சட்டம் ஒரு இருட்டறை -2திரைப்படத்தை இயக்குவதற்காக இந்தியா வந்தார் சினேகா. சினிமாவில் நடிகனாக முயற்சிக்கும் ஆகாஷ், படிப்பைத் தொடர சிங்கப்பூரிலேயே இருக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது.
சென்னைக்கு வந்து படம் உருவாக்குவதில் ஈடுபாடுடன் இருந்த சினேகா, படத்தை இயக்கி முடித்தார். படமும் ரிலீஸாகி பெயரும் கிடைத்தது.
இந்து மதத்தைச் சேர்ந்த ஆகாஷுக்கு, கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த சினேகாவை திருமணம் செய்து வைக்க அவரது தந்தை சேவியர் பிரிட்டோ சம்மதிக்கவில்லை.
சிங்கப்பூரில் படிப்பை முடித்துக்கொண்டு சென்னைக்குத் திரும்பிய ஆகாஷ் சேவியர் பிரிட்டோவை நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறார். அவருக்குப் பின்னாக நடிகர் முரளியின் மூத்த மகனும், ஆகாஷின் அண்ணனுமான அதர்வா முரளியும் தந்தை ஸ்தானத்திலிருந்து சினேகாவின் குடும்பத்துடன் பேச அனைத்தும் சுமூகமாக முடிந்தது.
கடந்த நவம்பர் மாதமே, டிசம்பர் 6ஆம் தேதி நிச்சயதார்த்தம் என முடிவெடுக்கப்பட்டு, நல்லபடியாக நிச்சயதார்த்தமும் முடிந்துவிட்டது. நிச்சயதார்த்தத்துக்கு குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் அழைக்கவேண்டும் என்பதால், தனது மனைவியின் அண்ணனான இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் அவரது மகன் விஜய்க்கும் அழைப்பு விடுத்தார் சேவியர் பிரிட்டோ.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படத்தை தயாரிப்பவர் சேவியர் பிரிட்டோ தான்.