இந்திய சினிமாவில் மூத்த நடிகர்,
இந்தத் தகவலை நடிகர் அமிதாப் பச்சன் நேற்று (ஜூலை 11) இரவு 11 மணி அளவில் தனது சமூக வலைதளப் பக்கம் வாயிலாக பகிரங்கமாக எந்த தயக்கமும் இன்றிஅறிவித்திருக்கிறார்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “எனக்கு கொரோனா பாசிட்டிவ் என பரிசோதனையில் தெரியவந்துள்ளது. நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். அவர்கள் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். எனது குடும்பத்தினர் மற்றும் வேலையாட்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முடிவுகளுக்காகக் காத்திருக்கிறோம்.
1969ஆம் ஆண்டு தனது திரை வாழ்க்கையைத் தொடங்கிய நடிகர் அமிதாப் பச்சனுக்கு தற்போது வயது 77 ஆகிறது. கொரோனா அச்சம் மற்றும் லாக்டெளன் காரணமாக அவர் வீட்டிலேயே இருந்த நிலையில் அவருக்கு கொரானோ தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதா, அவர்களின் உடல்நிலை எவ்வாறு இருக்கிறது என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்திய சினிமாவின் பிரபல நட்சத்திரங்கள் பலரும் அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி நம்பிக்கை வாழ்த்துகளை சமூக வலைதளங்கள் வாயிலாகத் தெரிவித்து வருகின்றனர். தாங்கள் மிகவும் நேசிக்கும் தங்களுடைய அமிதாப் பச்சன் கொரோனாவை வென்று விரைவில் நலம்பெற வேண்டும் என அவரது ரசிகர்களும் பிரார்த்தனைகளில் மூழ்கியுள்ளனர்.