நூற்றாண்டுகொண்டாடிய இந்திய சினிமாவில் தெலுங்கு திரைப்படங்களின் பங்களிப்பு அளப்பரியது. இந்தி, தமிழ், மலையாளம், கன்னட சினிமாக்கள் தங்கள் மொழி, கலாச்சார எல்லைகளை கடந்து திரைப்படங்களை தயாரித்தபோதும் தெலுங்கு சினிமா முக்கால் நூற்றாண்டுகாலம் தங்கள் மொழி, மாநிலம், கலாச்சாரத்தை கடந்து படங்களை தயாரிக்கவில்லை. தற்போது சர்வதேச அரங்கில் போட்டிபோடுகிற அளவிற்கு தெலுங்கு திரைப்படங்கள் முன்னேற்றம் கண்டு வருகிறது. பாகுபலி,RRR, புஷ்பா போன்ற படங்களின் படைப்பு திறனும், பாக்ஸ்ஆபீஸ் வசூலும் அதனை உறுதிப்படுத்துகிறது. இந்த நிலையில் ஆர்ஆர்ஆர் படத்தில் இடம் பெற்ற பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்த சூழலில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதுக்கு முதல் முறையாக புஷ்பா படத்தில் நாயகனாக நடித்ததற்காக
அல்லு அர்ச்சுன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்