கொரோனாவுக்குப் பிறகு முடிக்க வேண்டிய படங்களின் படப்பிடிப்புகள் தொடங்கி நடந்துவருகின்றன. சமீபமாக தான் புதுப்படங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. அப்படி, நேற்று ஒரே நாளில் ஆறு புதுப்படங்கள் குறித்த அறிவிப்புகள் தமிழ் சினிமாவில் வெளியாகியுள்ளது
1.சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் அருண்விஜய் மகனான ஆர்னவ் லீட் ரோலில் நடிக்க ஒரு படம் உருவாக இருக்கிறது. பொன்மகள் வந்தாள், சூரரைப் போற்றுப் படங்களைத் தொடர்ந்து, சூர்யா தயாரிக்கும் படம் இது. சூர்யா தயாரித்த பசங்க 2 படத்தைத் தொடர்ந்து, குழந்தைகளுக்கான சினிமாவாக இது உருவாக இருக்கிறது. இந்தப் படத்தை சரோவ் சண்முகம் இயக்கவுள்ளார்..

2. சசிகுமார் நடிக்கும் பகைவனுக்கு அருள்வாய்
சசிகுமார் நடிக்கும் ‘பகைவனுக்கு அருள்வாய்’ படத்தின் படப்பிடிப்பு நேற்று படப்பூஜையுடன் தொடங்கியது. ஜெய், நஸ்ரியா நடித்த ‘திருமணம் என்னும் நிக்காஹ்’ இயக்குநர் அனிஸ் இயக்கத்தில்தான் இந்தப் படம் உருவாக இருக்கிறது. படத்தை 4 மங்கீஸ் ஸ்டூடியோ தயாரிக்கிறது.

3.ஹிப் ஹாப் ஆதி – விதார்த் நடிக்கும் ‘அன்பறிவு’

4.ஸ்ரீகாந்த் நடிக்கும் ‘தீங்கிரை’

5. அசோக் – ப்ரியா பவானி ஷங்கர்
நடிகர்களான அசோக் செல்வன், ப்ரியா பவானி ஷங்கர் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. படத்தை ‘சதுரம் 2’ இயக்குநர் சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்குகிறார். சென்னையில் நேற்று பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. படத்துக்குத் தலைப்பு மட்டும் இன்னும் படக்குழு உறுதி செய்யவில்லை. படத்தை ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது

