‘அரசுக்குத் தகவல் தெரிவிக்காமல் படப்பிடிப்பு நடத்துவதால்தான் விபத்து ஏற்படுகின்றது’ என இந்தியன் 2 விபத்து குறித்து செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு இடையே ஏற்பட்ட விபத்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த சம்பவத்தால் இந்தியன் 2 படக்குழுவினர் மட்டுமின்றி தமிழ் திரைத்துறையினர் அனைவரும் பேரதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், ‘அரசிடம் எந்தத் தகவலும் தெரிவிக்காமல் படப்பிடிப்பு நடத்துவதால்தான் இத்தகைய விபத்துகள் ஏற்படுகின்றன. எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்க அரசு தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். படப்பிடிப்பு தளத்தில் பயன்படுத்தப்படும் பொருட்களின் உறுதித்தன்மை குறித்து அரசு ஆய்வு செய்யும்’ என்று தெரிவித்தார்.