எவ்வளவு பணம் வேண்டுமானாலும் பணம் தர்றேன். பிள்ளைக்கு சீட் வேணும்’ என்று புரோக்கர்களிடம் பணத்தை கொட்டிக்கொடுக்கும் எல்லா பெற்றோரும் அப்பாவிகள் இல்லை என்பதையும் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். கல்லூரி சேர்மன், சேர்மனின் மருகன், சீட் வாங்கிகொடுக்கும் புரோக்கர், அதற்கு எதிராக சீட் வாங்கிக்கொடுக்கும் கல்லூரி மாணவர்கள் என கதையில் யாருக்கும் யாரும் சளைத்தவர்கள் அல்ல என்று கதையை நகர்த்தியிருப்பதுதான் படத்தின் பலம். படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் இயல்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
கல்லூரிகளில் சேர்க்கும்போது பெற்றோர்கள் எப்படியெல்லாம் இருக்கவேண்டும், என்ன நடக்கிறது, என்று சாட்டையை சுழற்றி பாடம் எடுக்காமல், படமாக மட்டுமே எடுக்கப்பட்டிருக்கிறது.
இயக்கம் : மதிமாறன்
இசை – ஜிவி பிரகாஷ்குமார்
நடிப்பு: ஜிவி பிரகாஷ்குமார், வர்ஷா பொல்லம்மா, கௌதம் மேனன், வாகை சந்திரசேகர், சங்கிலி முருகன், தங்கத்துரை, குணாநிதி