திரையரங்குகள் திறக்க அனுமதி இல்லை – மத்திய அரசு கைவிரிப்பு

கொரானா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தேசம் தழுவிய ஊரடங்கு உத்தரவால் சினிமா தியேட்டர்கள் மார்ச் 18ஆம் தேதி முதல் மூடப்பட்டிருக்கின்றன. முழுதாக நான்கு மாதங்கள் முடிந்துவிட்ட நிலையில் வரும் ஆகஸ்டு 1 முதலான அடுத்த ஊரடங்குத் தளர்விலாவது தியேட்டர்கள் திறக்கப்படுமா

என்று திரையரங்கு உரிமையாளர்கள்தரப்பில்
எதிர்பார்த்திருந்தனர். இப்போதைக்கு திரையரங்குகள் திறக்க அனுமதிக்கப்பட இயலாது என மத்திய அரசு இன்று அறிவித்து உள்ளது

என்னதான் அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார் என்று செல்போனிலும் கம்ப்யூட்டரிலும் வீட்டு TVயில் சினிமா பார்த்தாலும் குடும்பத்தோடு தியேட்டருக்கு சென்று பார்க்கும் அனுபவத்தை இந்தத் தொழில் நுட்பங்கள் ஈடுகட்டப் போவதில்லை.

இந்த நிலையில் மக்கள் மத்தியில் பொழுதுபோக்கு என்றால் சினிமா தியேட்டர்கள் உரிமையாளர்களுக்கு தியேட்டர்கள் திறப்பு என்பது முக்கியமான வர்த்தகப் பிரச்சினையாகிவிட்டது. நான்கு மாதங்களாக தியேட்டர் ஊழியர்களுக்கு சம்பளம், பராமரிப்பு செலவுகளை செய்ய வேண்டும். ஆனால் தியேட்டரை திறக்க இயலாத நிலையில்பல தியேட்டர்களை வைத்திருக்கும்கார்ப்பரேட்நிறுவனங்களே திணறி வருகின்றன. பங்குச் சந்தை வரைக்கும் இவர்களது சரிவு எதிரொலிக்கிறது.

இந்தியாவில் அதிகமான திரையரங்குகளை நிர்வகித்து வரும்  பி.வி.ஆர் நிறுவனத்தின் பங்குகள் 2020 பிப்ரவரி மாதம் அதற்கு ஒரு வருடம் முன் இல்லாத உயர்வை எட்டி ஒரு பங்கு 2,082 ரூபாய் மதிப்பில் இருந்தது. ஆனால் மார்ச் 22 முதல் ஊரடங்கு உத்தரவைத் தொடர்ந்து தியேட்டர்கள் மூடப்பட்டதால் அடுத்த மூன்றே மாதங்களில் பங்குகளின் மதிப்பு மிகக் குறைந்தது. பி.வி.ஆரின் பங்கு 2020 மே மாதம்
706 ரூபாய் என்ற அளவுக்கு வீழ்ந்தது. இந்த நிலையில் ஆகஸ்டு 1 முதல் தியேட்டர்கள் திறக்கப்பட வாய்ப்பிருக்கிறது என்ற ஒற்றைத் தகவலால்…. பிவிஆரின் பங்குகள் திடீரென 6% அதிகரித்து 1,172 ரூபாய் ஆக உயர்ந்திருக்கிறது. ஆகஸ்டு 1 இல் ஒருவேளை தியேட்டர்கள் திறப்பு இல்லையென்றால் பங்கு மேலும் சரியும்.

பி.வி.ஆர் நிறுவனம், மல்டிபிளெக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அமைப்பில் முக்கியப் பங்காற்றுகிறது. இந்த அமைப்பின் மூலம் மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்திடம் பி.வி.ஆர் நிறுவன தரப்பில் பேசியிருக்கிறார்கள். ‘தியேட்டர்கள் இனியும் மூடப்பட்டுக் கிடந்தால் சினிமா தொழில் அதை ஒட்டிய தொழில், தியேட்டர்கள், அதை ஒட்டிய வர்த்தகங்கள் என்று பல்வேறு திசைகளிலும் பொருளாதார பாதிப்பு அதிகமாகும். எனவே, நிலையான நிபந்தனைகளை உருவாக்கி அதன் அடிப்படையில் தியேட்டர்களைத் திறக்கச் செய்யலாம் என்று மல்டிபிளெக்ஸ் உரிமையாளர்கள் அமைப்பு மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளனர். இதன்படி கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக காகிதமில்லா சினிமா டிக்கெட், சமூக இடைவெளியுடனான இருக்கை அமைப்புகள், ஏசி வசதி ரத்து, கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்தல் ஆகிய நிபந்தனைகளைப் பின்பற்றத் தயார் என்றும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தகவல் ஒளிபரப்பு அமைச்சகமும் உள்துறைக்கு குறிப்பு அனுப்பியுள்ளது. இந்தக் குறிப்பின் விளைவாகத்தான் தியேட்டர் நிறுவனப் பங்குகள் திடீரென ஏறுமுகம் காட்டியுள்ளன.

ஆனாலும் மாநகரங்களில் ஏற்பட்ட கொரோனா தொற்று இப்போது தமிழகம் உட்பட பல மாநிலங்களில் உள் மாவட்டங்களிலும் பரவி வரும் சூழலில் ஆகஸ்டு மாதமும் தியேட்டர்கள் திறப்பது கேள்விக்குறியாகியுள்ளது.

திரைப்பட தயாரிப்பாளர்கள் சிலரிடம் பேசியபோது, “பி.வி.ஆர் போன்ற பெரு நிறுவனங்கள் அழுத்தம் கொடுத்துவருவதால் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் ஒரு வேளை தியேட்டர்களைத் திறக்க அனுமதி அளித்தால் கூட மாநில அரசுகள்தான் இறுதி முடிவெடுக்க வேண்டும். தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் அதில் திரையிடுவதற்கு புதிய படங்கள் தயாராக இருக்கிறதா என்றால் அதுவும் கேள்விக்குறிதான். இது சம்பந்தமாக தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களிடம் பேசியபோது

நான்கு மாதங்களாக தொழில்முடங்கி இருந்தாலும் ஏற்கனவே தணிக்கை முடிந்த சிறு பட்ஜெட்படங்கள் ஐம்பதுக்கு மேல் ரிலீசுக்காக காத்திருக்கின்றன முன்னணி நடிகர்கள் நடித்த படங்களும் தயாராக உள்ளது அரங்கு நிறைந்த காட்சிகளாக படங்கள் ஓடினாலே முதலீடு முழுமையாக கிடைக்காது இந்த நிலையில் சமூக இடைவெளி காரணமாக 50% அல்லது 25% பார்வையாளர்களை மட்டும் அனுமதிக்க அரசு அனுமதி வழங்கினால் பெரும் நஷ்டத்தை முண்ணனி நடிகர்களின் படங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்

இன்றைக்கு மத்திய அரசு அறிவிப்பை பார்க்கிறபோது அது தவிர்க்கப்பட்டிருக்கிறது
தீபாவளிக்காவது திரையரங்குகள் திறக்க அனுமதிக்கப்படுமா என ஏக்க பெருமூச்சு விட்டனர்.