மாஸ்டர் திரைப்படத்தின் ஷூட்டிங் நடைபெறும் நெய்வேலி சுரங்கப் பகுதியில் நாளுக்கு நாள் ரசிகர்கள் கூட்டம் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. வருமான வரித் துறை அதிகாரிகளால் சோதனை செய்யப்பட்ட அடுத்த நாள் யாரும் எதிர்பாரா வண்ணம் ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் அங்கு பா.ஜ.க சார்பில் வந்த போராட்டக்காரர்களை எதிர்பார்க்கவில்லை. என்ன ஆனாலும் ஷூட்டிங்கை நிறுத்தவேண்டாம் என்று கூறி தொடர்ந்து படப்பிடிப்பை நடத்திய மாஸ்டர் படக்குழு, நேற்று(07.02.2020) மாலை ஸ்பாட்டுக்கு வெளியே திரண்ட ரசிகர்களால் ஸ்தம்பித்துப் போனது.
முக்கியமாக, பல்வேறு மாவட்டங்களிலிருந்து வண்டிகளை ஏற்பாடு செய்துகொண்டு நெய்வேலியிலுள்ள இரண்டாம் எண் சுரங்கத்துக்கு வெளியில் வந்து காத்திருந்த ரசிகர்கள், அங்கிருந்த வாகனங்கள் மற்றும் உயர்ந்த இடங்களின் மீது ஏறி விஜய்யைப் பார்க்கக் காத்திருந்தனர்.
இந்த சம்பவம் நடந்துமுடிந்த சில நிமிடங்களில் மாஸ்டர் படக்குழுவினரை அணுகிய சுரங்க அதிகாரிகள் “ஷூட்டிங் நடத்த மட்டுமே அனுமதி கொடுத்தோம். அதிலும், இத்தனை பேருக்கு மேலாக உள்ளே வரவோ அதிகளவில் வாகனங்கள் நிறுத்தவோ அனுமதியில்லை என்றும் குறிப்பிட்டிருந்தோம்.