விஐய் நடித்து வெளிவரும்படரிலீஸ் அல்லது ஏதாவது பிரச்சினை என்றால் மட்டுமே பரபரப்பாகப் பேசப்படாமல், ரசிகர்களின் செயல் அல்லது விஜய்யின் எண்ணத்தின் மூலம் அவ்வப்போது செய்திகளில் இடம்பெறுவது விஜய்யின் வழக்கமாக இருந்தது.
கட்டுப்படுத்த முடியாத இந்த அன்பைத் தனது ஸ்மார்ட்போனில் செல்ஃபியாக பதிவு செய்து ட்விட்டரில் போஸ்ட் செய்ததுடன் இன்னொரு வேலையையும் பார்த்திருக்கிறார் விஜய். அது, பட யூனிட்டில் இருந்த கேமராக்கள் அனைத்தையும் பயன்படுத்தி பஸ் மீது ஏறி ரசிகர்களுக்கு நன்றி சொல்வதையும், கையசைப்பதையும் படம்பிடிக்கச் சொன்னதுதான்.
திரைப்படத்தில் இடம்பெறும் புரட்சிகரமான பாடல் ஒன்றுக்கு வேறு எந்த காட்சிகளும் இல்லாமல், இந்த ரசிகர்களின் கூட்டத்தையும் என்னையும் வைத்துவிடுங்கள் என்று கூறியதுடன் சினிமாவுக்குப் பயன்படுத்தும் கேமராக்களையே பயன்படுத்துங்கள் என்றும் கூறியிருக்கிறார்.