இந்தப் படத்தில் நடிப்பது குறித்து நடிகர் விஜய் சேதுபதி கூறியிருப்பதாவ து தற்போது இந்தியில் ‘காந்தி டாக்ஸ்’ என்ற படத்தில் ஒப்பந்தமாகியுள்ளேன். அதில் வசனங்களே கிடையாது.
நான் தற்போது முன்பைவிட நன்றாகவே இந்தி பேசுகிறேன். இயக்குநர்கள் ராஜ் – டிகே இயக்கும் வெப் சீரிஸ் மற்றும் சந்தோஷ் சிவன் இயக்கும் ‘மும்பைகார்’ படங்களுக்காக நான் இந்தி சரளமாக பேச கற்று வருகிறேன்.
ஒரு நடிகரின் வார்த்தையைவிட அவரது மவுனமே நிறைய பேச வேண்டும் என்று நான் நம்புகிறேன். என்னை பொறுத்தவரை அதுவே உண்மை. உணர்வுகளை வெளிப்படுத்துவதன் மூலமே வார்த்தைகளை உணர முடியும். நான் பேசாமல் இருக்கும்போதுதான் என்னுடைய உணர்வுகள் வெளிப்படுகின்றனஎன தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி.