சென்னையில் ஐம்பது ஆண்டுகளை கடந்ததியேட்டர்கள் தொடர்ந்து மூடப்பட்டு வருகிறது ஏற்கெனவே ஆனந்த், பைலட், நட்ராஜ் காமதேனு, பாரகன், ராக்சி, ராஜகுமாரி, கிருஷ்ணவேணி, நாகேஷ், ஸ்டார் அபிராமி மெகாமால், தியேட்டர்கள் மூடப்பட்டன. சமீபகாலத்தில் சாந்தி தியேட்டர், மகாலட்சுமி,ஏவி.எம். ராஜேஸ்வரி தியேட்டர்கள் மூடப்பட்டது. இந்த நிலையில் தற்போது பாரம்பரியம் மிக்க அகஸ்தியா தியேட்டரும் நிரந்தரமாக மூடப்படுவதை அதிகாரபூர்வமாகஅறிவித்துள்ளனர்
ரஜினியின் அபூர்வ ராகங்கள், பைரவி, ப்ரியா, படிக்காதவன், கமலின் அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன் படங்களும், சூர்யாவின் காக்க காக்க படமும் வெள்ளி விழா கண்டன. திரைப்படம் தொடர்பான காட்சிகள் இந்த தியேட்டரில் தான் அதிகமாக படமாக்கப்படும் காரணம் அந்த அளவிற்கு விசாலமானதாக இருந்தது. வடசென்னையின் அடையாளமாக இருந்து வந்த இந்த திரையரங்கம்குளிர்சாதனவசதி இல்லாத தியேட்டர்களில் சிறந்த தியேட்டராக பலமுறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக படங்களை திரையிடுவதன் மூலம் தேவையானவருமானம் எதுவும் இல்லாததாலும், கொரோனா பிரச்சினையால் தற்போது தியேட்டர்கள் திறக்கும் சாத்தியம் இல்லை என்பதாலும், மக்கள் இப்போது ஏ.சி வசதி இல்லாத தியேட்டரை விரும்புவதில்லை என்பதாலும் அகஸ்தியா தியேட்டரை நிரந்தரமாக மூட முடிவு செய்துள்ளதாக கூறுகின்றனர்
வடசென்னையின் அடையாளங்களில் ஒன்றாக இருந்த அகஸ்தியா நிரந்தரமாக மூடப்படுவதற்கு இதுதான் காரணமா என தியேட்டர் வட்டாரத்தில்விசாரித்தபோது
தமிழகம் முழுவதும் பழமையான திரையரங்குகள் தங்களைநவீனபடுத்திக்கொண்டுவிட்