ரக்சிதா மகாலட்சுமி,சாந்தினி தமிழரசன், சாக்க்ஷி அகர்வால், காயத்ரி ஷான் ஆகிய நான்கு நாயகிகளும் முதன்மைப் பாத்திரங்கள் ஏற்றிருக்கின்றனர்.நாயகனுடன் இணைந்து நடிக்கும் போது சூடேற்றும் காட்சிகளில் தயக்கமின்றி நடித்திருக்கின்றனர்.
சிங்கம் புலி, எஸ்.கே.ஜீவா, சுரேஷ் சக்கரவர்த்தி, அனு விக்னேஷ், பேபி மனோஜ் மற்றும் படத்தின் இயக்குநர் ஜேஎஸ்கே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் டீகேவின் இசையில் பாடல்கள் படத்திற்கு மக்களைக் கூட்டிவரப் பயன்பட்டிருக்கிறது.பின்னணி இசையிலும் நெருப்பு மூட்டுகிறார்.
சில பல படுக்கையறைகளுக்குள் புகுந்துவிட்ட ஒளிப்பதிவாளர் சதீஷ்.ஜியின் ஒளிப்பதிவுக்கருவி அங்கு நடப்பவற்றை தணிக்கை இன்றி காட்ட முயன்றிருக்கிறது.
படத்தொகுப்பாளர் சி.எஸ்.பிரேம்குமார், படம் வேகமாக நகர்ந்துவிட்டால் ரசிகர்கள் கோபித்துக் கொள்வார்கள் என்று நினைத்து காட்சிகளுக்கு வேகத்தடை ஏற்படுத்தியிருக்கிறார்.