தன் மகனின் மருத்துவர் கனவை நனவாக்கப் போராடும் தந்தையாக நடித்திருக்கிறார் நாயகன் விதார்த்.இயக்குநர் அந்தக் கதாபாத்திரத்தை என்ன நினைத்து எழுதினாரோ? அதை அப்படியே திரையில் கொண்டுவந்திருக்கிறார். ரயில் பயணக் காட்சிகளிலும் தேர்வு மையக் காட்சிகளிலும் மட்டுமின்றி வீட்டில் இயல்பாக நடக்கும் காட்சிகளில் கூட அவருடைய நடிப்பு உச்சத்தை தொடுகிறது.
மக்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வழக்கறிஞரான ரகுமான், நீதியை எதிர்பார்த்து ஏங்குவோர் விரும்பும் நீதிபதியாக நடித்திருக்கும் பாலச்சந்திரன் ஆகியோர் படம் தடங்கல் இன்றி போரடிக்காமல் நகர பெரிதும் பயன்பட்டிருக்கிறார்கள்.
ராகவ்பிரசாத் இசையில் பாடல்கள் கேட்கலாம்.அறிவுமதி எழுதிய நீயே நீயே பாடல் கூடுதல் இதம்.கலா சரண், பின்னணி இசையில் பல காட்சிகளுக்கு நெருப்பு மூட்டியிருக்கிறார்.ஒளிப்பதிவா
படத்தொகுப்பாளர் ராம் சுதர்சன்,விரும்பி வேலை செய்திருக்கிறார்.சில காட்சிகளைரசித்து அப்படியே விட்டுவிட்டார்.
இயக்குநர்எஸ்.பி.சுப்புராமன்,
நீட் தேர்வு தேவையில்லாத ஒன்று என்பதை விரல்நீட்டும் வசனங்கள் இல்லாமல் காண்போரை உணரவைக்கிறார்.
நீட் தேர்வு வேண்டாம் என்கிற இந்தப்படத்தை மனநல மருத்துவர் திருநாவுக்கரசு தயாரித்திருக்கிறார் என்பது நீட்டை கொண்டு வந்தோருக்கும் நீட்டுக்கு முட்டுக் கொடுப்போருக்கும் சொல்லப்பட்டிருக்கும் அழுத்தமான செய்தி.