ஆணவக்கொலைகள் பற்றி பேசும் படைப்பாளி

சென்னை ‍ 28′, ‘பேரழகன்’ உள்ளிட்ட‌ 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களின் விநியோகஸ்தர்  பிரம்மா அன்புராஜ் தனது ஏவிஆர் அன்பு சினிமாஸ் சார்பில் தயாரிக்கும் முதல் படம் ‘படைப்பாளி’.
பாலாஜி ஜெயபாலன் இயக்கும் இத்திரைப்படத்தில் மலேசிய தமிழ் நடிகர்யுவராஜ் கிருஷ்ணசாமி மற்றும் பாலாஜி ஜெயபாலன் நாயகர்களாக நடிக்கின்றனர். தனது முதல் படத்தை இயக்கும் ஒரு இளைஞனும் ஆணவக் கொலைகள் குறித்த அவனது படைப்பும் திரையுலக மற்றும் நிஜ அரசியலை எதிர்கொள்வதே படத்தின் மையக்கரு. சில உண்மை சம்பவங்களில் அடிப்படையில் இப்படத்தின் திரைக்கதை எழுதப்பட்டுள்ளது என்கிறார் இயக்குநர்.
கதாநாயகியாக நடிகை சவுந்தரியா அறிமுகமாகும் ‘படைப்பாளி’ திரைப்படத்தில்  தயாரிப்பாளர் கே.ராஜன், ‘காதல் கண்கட்டுதே’ திரைப்படத்தின் இயக்குநர் சிவராஜ், கார்த்திகேயன் கோவிந்தராஜ், பிரசாந் வர்மன், ஏ.எம்.எஸ். ஹரிகிருஷ்ணன், பிரியதர்ஷினி, டோமினிக், ஆண்ட்லின், தர்மராஜ், பிரதீப், தயனேஷ், கார்த்திக் மானஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.   எஸ்.ஆர். ராம் இசையமைத்துள்ளார்.
மிதுன் சந்திரன் மற்றும் ரஜேஸ் டி.ஜி. ஆகியோரின் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தின்  படத்தொகுப்பு பணிகளை ஆஞ்சேஷ் மற்றும் ஆண்டனி பிரிட்டோவும், எஸ்.ஃஎப்.எக்ஸ் பணிகளை ஃஎப்.எக்ஸ் ஸ்டுடியோவும் வி.ஃஎப்.எக்ஸ் பணிகளை சினிஃபைல் ஸ்டுடியோவும் செய்துள்ளனர். குமரகுரு, ராம்ஜி, சக்தி, பிரபு ஆகியோர் இணை இயக்குநர்களாக பணியாற்றியுள்ளனர்.
‘படைப்பாளி’ திரைப்படம் திரையரங்குகளில் விரைவில் வெளியாகும் என்றும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெகு விரைவில் வெளியிடப்படும் என்றும் பட நிறுவனமான‌ ஏவிஆர் அன்பு சினிமாஸ் தெரிவித்துள்ளது.