ஆண்ட சாதியும், அடிமை சாதியும் இணைந்து உருவாக்கியிருக்கும் ‘சீரன்’ திரைப்படம்
இந்தப் படத்தில் ஜேம்ஸ் கார்த்திக், சோனியா அகர்வால், இனியா, ‘ஆடுகளம்’ நரேன், அருந்ததி நாயர், சென்ட்ராயன், ஆஜித், கிரிஷா குரூப், ‘சூப்பர் குட்’ சுப்ரமணி, ஆரியன், ‘பரியேறும் பெருமாள்’ வெங்கடேஷ், ‘பிச்சைக்காரன்’ மூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தயாரிப்பாளர் வாழ்வில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டை ஓட்டி படக் குழுவினர் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்இந்நிகழ்வில் தயாரிப்பாளர் மற்றும் கதாநாயகன் ஜேம்ஸ் கார்த்திக் பேசும்போது,
தயாரிப்பிலும், நடிப்பிலும் இந்தப் படத்தில் நான் பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். இந்தப் படத்தில் நடிக்கச் சம்மதித்த சோனியா அகர்வால், நரேன் மற்றும் இனியா அவர்களுக்கு நன்றி.இயக்குநர் எனக்கு மிகச் சிறந்த நண்பர். தயாரிப்பாளருக்கு 1 ரூபாய் கூட நஷ்டம் வரக்கூடாது என்று நினைப்பவர் இயக்குநர். எனக்கும் அவருக்கும் சில கருத்து வேறுபாடுகள் எழுந்தன. ஆனால், அது படத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றது. அதேபோல் ஒளிப்பதிவாளர் மிகவும் சிறந்த காட்சிகளை இந்தப் படத்தில் உருவாக்கியுள்ளார். அவருக்கும் எனது நன்றி. பாடல்களும் நன்றாக வந்துள்ளது. கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் இந்தப் படம் பிடிக்கும். ஒட்டு மொத்த படக் குழுவிற்கும் எனது வாழ்த்துக்கள் நன்றி..” என்றார்.
இயக்குநர் துரை K.முருகன் பேசும்போது,
இந்தப் படம் தயாரிப்பாளர் வாழ்வில் நடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவானது. அவர் சொன்னதைக் கேட்டபோது, என் சிறு வயதில் என் தாத்தா, எத்தனை ஜாதி வெறியுடன் இருந்துள்ளார் என்ற ஞாபகமும் மிகப் பெரும் கோபமும் வந்தது. அதனை அழுத்தமாக இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறோம்.
என்றார்.
நடிகை இனியா பேசும்போது,
நடிகை சோனியா அகர்வால் பேசும்போது,
இயக்குநர் ஃபாஸ்டாக வேலை செய்வார். ஆனால், கச்சிதமாக காட்சிகளை உருவாக்கிவிடுவார். படத்தை நன்றாக எடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர். மிகவும் பொறுமைசாலி. அருமையாகக் காட்சியைப் படமாக்கியுள்ளார். படக் குழுவினர் அனைவருக்கும் நன்றி. உங்களுடன் பணி புரிந்தது எனக்கு மறக்க முடியாத ஒரு அனுபவம். கண்டிப்பாக இந்தப் படம் பெரிய வரவேற்பை பெறும்…” என்றார்.
நடிகர் ‘ஆடுகளம்’ நரேன் பேசும்போது,
முதல் படம் போலவே இல்லை. அழகாக நடித்துள்ளார் கதாநாயகன் ஜேம்ஸ் கார்த்திக். இயக்குநர் பல போராட்டங்களுக்கு பிறகு இந்தப் படத்தைக் கொண்டு வந்துள்ளார். தனக்கு காட்சி எப்படி வேண்டுமோ அது வரும்வரை விடமாட்டார், கடுமையான உழைப்பாளி, இன்னும் பெரிய இடத்திற்குச் செல்வார். நீங்கள்தான் இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். யாரையும் இந்த படம் ஏமாற்றாது, அனைவருக்கும் ஒரு நல்ல கருத்தைச் சொல்லும் படமாக இந்தப் படம் இருக்கும் நன்றி..” என்றார்.
நடிகை அருந்ததி நாயர் பேசும்போது,
நடிகை கிரிஷா குருப் பேசும்போது,
இந்தப் படத்தின் கதையை முதன்முதலில் எப்படிக் கூறினாரோ.. அதுபோலவேதான் படமும் உருவாகியுள்ளது, மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த யாழினி கதாபாத்திரத்துக்கு என்னை தேர்வு செய்ததற்கும் நன்றி, இந்தப் படத்தில் ஒரு அப்பாவி கிராமத்து பெண்ணாக நடித்துள்ளேன். நான் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பது இதுவே முதல்முறை,நடிகர் ஆஜீத் ஒரு பக்க பலமாக இருந்தார். அவரது ஒத்துழைப்பு படப்பிடிப்பில் மிகவும் உதவியாக இருந்தது. ஆஜித்துக்கு மிகவும் நன்றி. நடிகை இனியாவுடன் ஒரு சிறிய காட்சி உள்ளது. அது எனக்கு ஒரு நல்ல அனுபவத்தை கொடுத்தது. அவரிடமிருந்து நான் பல விஷயங்களை கற்றுக் கொண்டேன்.படத்தில் பாடல்கள் அழகாக வந்துள்ளது. என்னை அழகாக காட்டியுள்ள ஒளிப்பதிவாளர் பாஸ்கர் சாருக்கு நன்றி, மேலும் எனக்கு இந்தப் படத்தில் வாய்ப்பளித்த தயாரிப்பாளர் கார்த்திக் சாருக்கு நன்றி. உங்களின் ஆதரவை படத்திற்குத் தர வேண்டும். ஒட்டு மொத்த படக் குழுவிற்கும் எனது நன்றி..” என்றார்.
நடிகர் சென்ட்ராயன் பேசும்போது,
நடிகர் சூப்பர் குட் சுப்ரமணி பேசும்போது,
இசையமைப்பாளர் A.K.சசிதரண் பேசும்போது,
இசையமைப்பாளர் ஜூபின் பேசும்போது,