அப்போது பேசிய இயக்குநர் ரஞ்சித்,
தினம் அதைப் பார்த்து நடந்ததினால் இந்த படத்தின் இயக்குனரும் என்னுடைய நண்பருமான தினகரன் இதுபோன்ற ஒரு ஸ்கிரிப்டை என்னிடம் கொடுத்த போது எனக்கு முதலில் ஆச்சரியமாக இருந்தது. எப்படி இவனுக்கு இது புரிந்தது என்ற கேள்வியும் எழுந்தது.
இந்த படத்தில் அஞ்சலை என்ற ஒரு கதாபாத்திரம் வருகிறது. அந்த அஞ்சலை தான் என்னுடைய அம்மா.. என்னுடைய ஆசையே என்னுடைய அம்மா கஷ்டப்பட்டது போல என்னுடைய மனைவியோ, குழந்தைகளோ கஷ்டப்படக் கூடாது என்பதுதான்.
ஊரில் திருவிழா என்றால்
நான் பெரிய ஆளாக ஆன பின்னர் அவர் அதை எதிர்பார்த்தார். ஆனால் அவருக்கு கல்லீரல் கோளாறு ஏற்பட்டு விட்டது. ஒரு கட்டத்தில் முற்றிலுமாக அது செயலிழந்ததால், அவரால் வாழ முடியவில்லை.மருத்துவர்கள் அவர் இன்னும் ஆறு மாத காலம் உயிரோடு இருப்பார் என்று சொல்லி இருந்தார்கள்; ஆனால் அவர் ஒரு வாரத்திலேயே இறந்து விட்டார்.
காரணம் நீலம் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெளியாகும் படங்களின் நோக்கம் வெற்றி மட்டுமே கிடையாது; மக்களிடம் திரைத்துறைக்கு புதிதாக வருபவர்களிடம் அது என்ன மாதிரியான மாற்றத்தை உருவாக்குகிறது என்பதையும் பார்க்கிறோம். இந்த படம் குறித்து இங்கு பேசியவர்கள் நல்விதமாக பேசியது எனக்கு உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.
என்னுடைய படங்கள் மட்டுமல்லாமல் என்னுடைய தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து வரும் படங்களையும் மிகவும் கருணையற்று விமர்சிக்கிறார்கள். ஆனால் அதற்காக நான் இப்படி விமர்சனம் செய்யாதீர்கள் என்று நான் கூற மாட்டேன் எங்களைப் பற்றி பேசுவதே எங்களுக்கு பெரிய விஷயம் தான்’என்று பேசினார்.