காசோலை வழங்கிய கலாநிதி மாறன்.

தமிழ் சினிமாவில் ஒரு படம் வெற்றி பெற்று விட்டால் அந்த படத்தின் இயக்குநருக்கு கார் பரிசளிப்பது, தங்க சங்கிலி அணிவிப்பது வழக்கமாக உள்ளது. சன்பிக்சர்ஸ் கலாநிதி மாறன் ஜெயிலர் படம் எதிர்பாராத வெற்றி பெற்று பாக்ஸ் ஆபீஸ் வசூலில் லாபத்தை பெற்று தந்தது. அதனால் அப்படத்தின் நாயகனான ரஜினிகாந்த்க்கு காசோலை வழங்கி கௌரவித்து வெற்றியை கொண்டாடினார். அதே போன்று ராயன் படத்தின் வெற்றியை அறிவிக்கும் வகையில், அந்தப்படத்தின் நடிகரும், இயக்குநருமான தனுஷ் சிற்கு நடிப்பு, இயக்கம் என தனி தனி காசோலை வழங்கி கெளரவித்துள்ளார். ஜெயிலர் படத்திற்கு ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்ட காசோலை மதிப்பு எவ்வளவு என்பதை கலாநிதி மாறனும், ரஜினிகாந்த்தும் வெளிப்படுத்தவில்லை. அதே போன்று தனுஷ்க்கு கலாநிதி மாறன் வழங்கிய கசோலை மதிப்பை இருவருமே அறிவிக்கவில்லை.

சன்பிக்சர்ஸ் தயாரிப்பில்நடிகர் தனுஷ் நடித்து, இயக்கிய திரைப்படம்  ராயன். அவரது சினிமா வாழ்க்கையில் 50வது படமாக வெளியான ராயன் வணிக ரீதியாக தயாரிப்பாளருக்கும், படைப்பு ரீதியாக இயக்குநர் மற்றும் நடிகர் தனுஷ்க்கு வெற்றியை கொடுத்த படம் ராயன்.
கடந்த சூலை 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ராயன் படத்தில் அபர்ணா பாலமுரளி, பிரகாஷ் ராஜ், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன்,எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் நடித்திருந்தனர் இதுவரை
தனுஷ் நடித்த படங்களில் திரையரங்குகளில் அதிகம் வசூலித்த படமாக ராயன் படம் இடம்பிடித்துள்ளது. 2024 ம் ஆண்டு இதுவரை வெளியான தமிழ் திரைப்படங்களில் 155 கோடி ரூபாய் வசூல் செய்து ராயன்  முதல் இடத்தில் உள்ளது.இப்படம் இன்றுஓ.டி.டி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் ‘ராயன்’ படத்தின் தயாரிப்பாளரான கலாநிதி மாறன் படத்தின் இயக்குனர் மற்றும் நடிகரான தனுஷை அழைத்து ராயன் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக இரண்டு காசோலையை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.