கடந்த 2015-ம் ஆண்டு பிரம்மா இயக்கத்தில் உருவான ‘குற்றம் கடிதல்’ என்ற படத்திற்கு தமிழில் சிறந்த படத்திற்கான தேசியவிருது கிடைத்தது.இந்த நிலையில் ‘குற்றம் கடிதல்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கும் நிலையில் முதல் பாகத்தை தயாரித்த தயாரிப்பாளர் சதீஷ்குமார் நாயகனாக மாறியுள்ளார்.
Related Posts
இந்த படம் குறித்து பேசிய ஜே.எஸ்.கே. சதீஷ் குமார், “கொடைக்கானல் அருகே ஒரு கிராமத்தில் வசிக்கும் 60 வயது ஆசிரியராக நடிக்கிறேன். ஓய்வு பெறும் சமயத்தில் குடியரசுத் தலைவர் கரங்களால் நல்லாசிரியர் விருது வாங்கும் நேரத்தில் அவரது வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் சம்பவங்களை தொகுத்து இந்த கதை அமைக்கப்பட்டுள்ளது,” என்று தெரிவித்தார்.இந்த படத்தை பார்த்திபன் நடித்த ‘புதுமைப்பித்தன்’, கார்த்திக் நடித்த ‘லவ்லி’ படங்களை இயக்கிய ஜீவா இயக்குகிறார்.ஜேஎஸ்கே பிலிம்ஸ் கார்ப்பரேஷன் என்ற பெயரில் ‘ஆரோகணம்’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ ,’பரதேசி’, ‘ரம்மி’ ,’புரியாத புதிர்’ உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ள சதீஷ்குமார், ‘தரமணி’, ‘பேரன்பு’ ,’அநீதி’ உள்பட சில படங்களில் இவர் நடித்திருந்தாலும் தற்போது அவர் ஹீரோவாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.