இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க முதலில் விஷாலை அணுகியதாகச் சொல்லப்படுகிறது.கதை மற்றும் இயக்குநர் ஆகிய விசயங்களில் விஷாலுக்கு உடன்பாடு ஏற்பட்டது என்றும் அதேசமயம்,சம்பள விசயம் சரியாக வராததால் அவர் நடிக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
அதன்பின், கழுவேத்தி மூர்க்கன் படத்தில் நாயகனாக நடித்த அருள்நிதியை கதாநாயகனாக்கி இப்படத்தை எடுக்க முடிவு செய்திருக்கிறார்கள்.
அந்தத் தொடர்பின் மூலம் சீவலப்பேரி பாண்டி படத்தின் இரண்டாம்பாகத்தை எடுக்கும் முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.
அதேபோல டிமாண்டி காலனி 2 படத்தை இந்நிறுவனம் உலகம் முழுவதும் வெளியிட்டது.அதன்மூலம் அதன் நாயகன் அருள்நிதியோடு ஏற்பட்ட நல்லுறவு காரணமாக அவரையே இந்தப்படத்தின் கதாநாயகனாக்கியிருக்கிறார்கள்.
முதல்பாகத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்குநர் பிரதாப்போத்தன் உடனிருந்த கே.ராஜேஷ்வர் இரண்டாம்பாகத்தின் திரைக்கதையையும் எழுதியிருக்கிறாராம்.விரைவில் இந்தப்படத்தின் அறிவிப்பு மற்றும் தொடக்கவிழா நடைபெறும் என்று சொல்லப்படுகிறது.