சுயாதீன கலைஞர்களுக்காக ஜீவா தொடங்கும் இசை நிறுவனம்

தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குநர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து வரும் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த 50வது திரைப்படமான ஆசை ஆசையாய் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ராம், கற்றது தமிழ், கோ, டிஷ்யூம், ஈ, ராமேஸ்வரம், ஜிப்ஜி போன்ற படங்களில் இயக்குநர்களின் விருப்பத்துக்குரிய கதாநாயகனாக நடித்தவர். தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசனுக்கு பின் சைப்ரஸ் திரைப்பட விழாவில் அமீர் இயக்கிய ராம் படத்தில் நடித்ததற்காக விருது பெற்றவர் இன்றுவரை ஜீவா மட்டுமே. அவர் திரையுலகில
21 வருடங்களை நிறைவடைவதை முன்னிட்டு அடுத்த கட்டமாக இசை தயாரிப்பு நிறுவனத்தை தொடங்குவதாக அறிவிக்கும் நிகழ்வு சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.
  ‘டெஃப்  ஃப்ராக்ஸ்’  ரெக்கார்ட்ஸ் மியூசிக் லேபிள் என்ற புதிய இசை நிறுவனத்தை சுதந்திரக் கலைஞர்களுக்கு அர்ப்பணித்து, அவர்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்துவதற்கான தளத்தை வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில நடிகர்கள் ஜித்தன் ரமேஷ்,ஆர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, விஷ்ணு விஷால்,மிர்ச்சி சிவா,விச்சு விஸ்வநாத்,விவேக் பிரசன்னா, கலையரசன்,ஆதவ் கண்ணதாசன், ஜெகன்,இயக்குனர் மோகன்.G , நடிகர்  மற்றும் இசை அமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, சித்தார்த் விபின், சந்தோஷ் நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் நடிகர் ஜீவா பேசும்பொழுது,
“கடந்த ஒரு வருடமாக இந்த ‘டெஃப் ஃப்ராக்ஸ்’ மியூசிக் லேபிள் நிறுவனத்திற்காக என்னென்ன தயாரிப்புகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம் என்பதை இன்று வெளியிடுகிறோம்.மேலும் இந்த நிறுவனம் சுயாதீன கலைஞர்களுக்கான பாடல்கள் மற்றும் குறும்படங்களை தயாரிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. எங்களது தாய் நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் வாயிலாக 40-க்கும்மேற்பட்ட புதுமுக இயக்குனர்களை அறிமுகப்படுத்தியது போல இந்த நிறுவனம் மூலம் சுயாதீன  கலைஞர்களை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் அவர்களின் கூறிய சிறுகதையின் அடிப்படையில் ‘யார் சொல்வததையும் கேட்காமல் நமது வேலையை நாம் செய்து கொண்டே முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும்’ என்பதை அடிப்படையாக வைத்து
இந்நிறுவனத்திற்கு ‘டெப்ஃ ஃப்ராக்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிறுவனம் கலைக்கூடராமாக இருக்கும்” என்றார்.
 சுயாதீன கலைஞர் கில்லா.கே என்பவரின்  ‘புரிய வை’ பாடலை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வெளியிட்டு பேசும்பொழுது
தனது மிகப்பெரிய சுயாதீன பாடலாக  ‘என்ஜாய் என்ஜாமி’ பாடல் அமைந்ததாகவும் தானும் ஒரு மியூசிக் லேபிள் நிறுவனம் ஆரம்பிக்க இருப்பதாகவும் ஜீவா போன்றவர்கள் மியூசிக் லேபிள் நிறுவனம் தொடங்கி இருப்பது ஒரே நேரத்தில் ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைப்பதற்கு உதவிஆக இருக்கும்.ஜீவா போன்ற வர்த்தக திறமை கொண்டவர்களும் கலை ஆர்வம் கொண்டவர்களும் இருந்தால் சுயாதீன கலைஞர்களுக்கு வானமே எல்லை என்றவர் மேலும் பேசுகிற போது
தமிழ்நாட்டிலேயே 6 லட்சத்திற்கும் மேற்பட்ட சுயாதீன பாடல் கலைஞர்கள் இருப்பதாகவும் அவர்களுக்கான மேடையாக இந்த ‘டெஃப் ஃப்ராக்ஸ்’ மியூசிக் லேபிள் நிறுவனம் அமையும் என்று வாழ்த்தினார்.
‘பனிமேல் விழும் கனல் காற்று’ என்ற குறும்படத்தை வெளியிட்டு பேசிய விஷ்ணு விஷால்
திரை வாழ்க்கையை துவங்கும்போது வாய்ப்புக்காக நிறைய அலைந்திருப்பதாகவும் இரண்டு நாட்களுக்கு முன்பு தான் திரைத்துறைக்கு வந்து 15 வருடங்களை நிறைவு செய்ததாகவும், 13 ஆண்டுகள் ஜீவாவுடன் நட்பு இருப்பதாகவும் சினிமாவில் நிறைய வாய்ப்பு இருப்பதாகவும், ஆனால் அந்த வாய்ப்புக்கான சரியான வழியை புதிய இளம்தலைமுறை சுயாதீன கலைஞர்களுக்கு இந்த மாதிரியான ‘டெஃப் ஃப்ராக்ஸ்’ மூலம் உருவாக்கி உள்ளார் என்றவர் மேலும் பேசுகிற போது புதிய திறமையாளர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது அவரது ரத்தத்திலேயே உள்ளது அவரது  தந்தை R.P. சவுத்ரி அவர்களும்இதுபோல நிறைய கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார். தன்னுடைய தயாரிப்பு நிறுவனமும் இந்நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக விஷ்ணு விஷால் கூறினார்.
 சுயாதீன பாடகர் கென்னிஷா அவர்களின் ‘இதை யார் சொல்வாரோ’ என்ற பாடலை நடிகர் ஜெயம் ரவி வெளியீட்டு பேசும் பொழுது
 சமூக வலைத்தளங்கள் வாய்ப்புகளை பெறுவதற்கு ஒரு சுலபமான வழியாக உள்ளது. சமூக வலைத்தளங்களில் எங்களை விட சுயாதீன கலைஞர்களுக்கான ஆதரவாளர்கள் அதிகமாக உள்ளனர். இது போன்ற சுயாதீன கலைஞர்களுக்கு ஜீவா போன்ற வழிகாட்டி கிடைத்திருப்பது பெரிய பரிசு. அவருக்கு தந்தை ஒரு வழிகாட்டியாக இருந்தது போல அவர் உங்களுக்கு இருப்பார் என்றார்.