இதற்கிடையே, நாயகனும், நாயகியும் காதலித்தாலும், தனது அம்மா யார் என்று கண்டுபிடித்து, அவர் குற்றமற்றவர் என்பதை நிரூபித்த பிறகே திருமணம் என்பதில் நாயகி உறுதியாக இருக்கிறார். நாயகியின் அம்மாவை கண்டுபிடிக்கும் முயற்சியில் நாயகன் ஈடுபட, அவரது அப்பா யார்? என்ற உண்மை தெரிய வருகிறது. அதன் மூலம் நாயகியின் அம்மா பற்றிய உண்மை தெரிந்ததா?, நாயகியின் முடிவின்படி அவரது திருமணம் நடந்ததா?, வில்லன் சைக்கிள் பாண்டியின் எண்ணம் ஈடேறியதா? ஆகிய கேள்விகளுக்கான பதில்களை தெருக்கூத்து கலைகளை பின்னணியாக கொண்டு, பாடல்கள் மற்றும் நடனங்கள் மூலம் சொல்வது தான் ‘டப்பாங்குத்து’.மதுரையைச் சுற்றி நடக்கும் தெருக்கூத்து கலைகள் மற்றும் கலைஞர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள திரைக்கதை இதுவரை நாம் பார்த்திராத ஒரு பாணியில் முழுக்க முழுக்க பாடல்கள் மற்றும் நடனங்கள் மூலம் நிரம்பியிருந்தாலும் அவை அனைத்துமே கேட்க கேட்க திகட்டாதவைகளாக இருக்கின்றன.
தொலைக்காட்சி தொடர்களில் அசத்திய சங்கரபாண்டி, நாயகனாக நடித்திருக்கும் முதல் படத்திலேயே நடிப்பில் மட்டும் அல்லாமல் நடனத்திலும் அசத்தியிருக்கிறார். வசன உச்சரிப்பு, உடல் மொழி மற்றும் நடனம் ஆகியவை மூலம் தெருக்கூத்து கலைஞராகவே வலம் வந்திருக்கும் அவர், படத்தில் இடம்பெறும் அனைத்து பாடல்களிலும் வெளிப்படுத்தும் எனர்ஜி பார்வையாளர்களையும் ஆட வைக்கும் விதத்தில் இருக்கிறது. படத்தின் பல முக்கிய திருப்பங்களை பாடல்கள் மூலமாக விவரித்தாலும், அதை தனது எக்ஸ்பிரஷன்கள் மூலம் காட்சிகளாக ரசிகர்களிடத்தில் கொண்டு சேர்த்திருக்கிறார் நாயகன்சங்கரபாண்டி,