-
மூன்றாம்பிறை, பகல் நிலவு, இதயம் போன்ற படங்களை தயாரித்த நிறுவனம்சத்யஜோதிபிலிம்ஸ் தற்போது, ராக்கி, சாணிக் காயிதம்,படங்களை இயக்கியஅருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ என்ற புதிய திரைப்படத்தை தயாரிக்கப்போவதாக அறிவித்துள்ளது.பிரம்மாண்டமாக உருவாக்கப்படவுள்ள இப்படம் 1930-40-களின் பின்னணியில் எடுக்கப்படும் பீரியட் ஃபிலிமாக உருவாகவுள்ளது, மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் இப்படம் வெளியாகவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளதுஇந்தப் படம் பற்றி தயாரிப்பாளர் T.G.தியாகராஜன் பேசும்போது, “எங்களின் மதிப்புமிக்க திரைப்படமான ‘கேப்டன் மில்லர்’ படத்தை இன்றைக்கு அறிவிப்பதில் நான் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன்.எங்கள் தயாரிப்பு நிறுவனத்தில், பிரம்மாண்டமான அளவில் உருவாகும் நம்பிக்கைக்குரிய திரைப்படங்களில் ஒன்றாக இப்படம் இருக்கும்.நடிகர் தனுஷுடன் பணி புரிவது எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியைத் தரும். ஏனெனில், எங்களின் கூட்டணியில் வெளியான முந்தைய திரைப்படங்கள் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன.
இயக்குநர் அருண் மாதேஸ்வரன் எனக்கும், தனுஷுக்கும் ஸ்கிரிப்டை விவரித்தபோது, நாங்கள் இருவரும் உற்சாகமானோம், மேலும் பெரிய அளவில் இதனை உருவாக்க விரும்பினோம்.
இயக்குநர் அருணின் வழக்கத்திற்கு மாறான சிந்தனை மற்றும் விதிவிலக்கான படைப்புகளை வழங்கும் முயற்சி, மாறுபட்ட அவரது திரைப்படத் தயாரிப்பு முறைகள் என அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும்.இந்தப் படம் சிறந்த முறையில் வடிவமைக்கப்படுவதை உறுதி செய்ய, ஒரு குழு ஒரு வருடமாக, முன் தயாரிப்பு பணிகளிலும், ஆய்வுப் பணிகளிலும் ஈடுபட்டது.இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் தனித்துவமான இசை இந்தப் படத்தின் தரத்தை மேலும் உயர்த்தும். இந்தப் படத்தில் நடிக்கும் ஒவ்வொரு நடிகரும், தொழில் நுட்பக் கலைஞர்களும் ஏற்கனவே திரைப்படத்துறையில்தங்களுக்கென சிறப்பான ஒரு இடத்தை பெற்றிருக்கிறார்கள் மேலும் அவர்களின் பங்களிப்பு ‘கேப்டன் மில்லரை’ பெரிய அளவில் கொண்டு செல்லும்.
உண்மையில், இந்தப் படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப குழுவினர் அந்தந்த துறையினுள் சாதனை புரிந்த, சிறந்த திறமைகளின் அடிப்படையில் இறுதி செய்யப்பட்டுள்ளனர். இதில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.இத்திரைப்படம் தமிழ் சினிமாவில் புதியதாகவும் கவர்ச்சிகரமான படைப்பாகவும் இருக்கும்.எங்களது சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைப் பார்வையாளர்களுக்கு ஒரு அற்புதமான சினிமா அனுபவமாக வழங்குவதற்கான அனைத்துமுயற்சிகளையும் மேற்கொள்ளும்என்றார் தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன்.