தீபாவளி திரைப்படங்கள் அன்றும் – இன்றும் சிறப்புக்கட்டுரை

திரையரங்குகளுக்கு தீபாவளி பண்டிகையும், அதனையொட்டி வெளியாகும் புதிய திரைப்படங்களும் கற்பகவிருட்சம் போன்றது ரீலீஸ் சென்டர்களில் புதிய படங்களும் அதற்கடுத்த நிலைகளில் உள்ளசென்டர்களில் ஏற்கனவே ரீலீசாகி வெற்றிபெற்ற படங்களை ஷிப்டிங் முறையில் திரையிட தீபாவளிக்கு முதல் நாள் சினிமா விநியோகஸ்தர்கள் அலுவலகங்கள் திரையரங்க உரிமையாளர்கள் கூட்டத்தால் நிரம்பிவழியும் பழைய போஸ்டர்களை விற்பனை செய்பவர்களின் குடவுன் விடியும்வரை திறந்திருக்கும் மிகப்பெரிய பணவரவுகள் தீபாவளிக்கு முதல் நாள் நடக்கும்

புதிய படங்களின் பிலிம் பாக்ஸ்கள் லேபரெட்டரிகளில் சம்பிரதாயமான பூஜைகளை நடத்தி படங்களை வாங்கிய விநியோகஸ்தர்களிடம் தயாரிப்பாளர்கள் பயபக்தியுடன் வழங்குவார்கள்அதிலும் பல படங்கள் வெளியாகும்போது கூட்டம் நிரம்பி வழியும் ஆனால் இப்போதெல்லாம்ஒரு திரைப்படம் நன்றாக இருக்கிறதா இல்லையா என்பதை விட்டுவிட்டு, அது எத்தனை கோடி வசூல் ஈட்டும் என்ற கணக்கீடு இன்று பொங்கி வழிகிறது. இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியானால் வசூல் பாதிக்கப்படும் என புலம்பும் தமிழ் சினிமாவில் ஒரு பண்டிகை நாளில்  ஐந்து படங்கள் அதுவும் உச்சத்தில் இருந்த ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, ஆகியோர் நடித்த படங்களை முன்னணி இயக்குநர்கள் இயக்கத்தில், முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் தயாரித்து வெளியிட்டு அந்தப்படங்கள்
 அனைத்துமே ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றதென்பது இன்றைய தலைமுறை நம்ப முடியாத ஒரு அதிசயம்தான் அப்படி ஒரு நிகழ்வு உங்களுக்காக

1987 தீபாவளிக்கு எத்தனை படங்கள் ரிலீஸ் ஆனது, அந்த காலகட்டங்களில் தயாரிப்பாளர்களாக, திரைப்பட விநியோகஸ்தர்களாக, வியாபார தொடர்பாளர்களாக, படப் பிரதிநிதிகளாக, போஸ்டர் விற்கும் வியாபாரிகளாக,இருந்தவர்களிடம் பேசியதில் இருந்து….

1987ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதியன்று தீபாவளி வெளியீடுகளாக மனிதன், நாயகன், உழவன் மகன், சட்டம் ஒரு விளையாட்டு, இவர்கள் வருங்காலத் தூண்கள்,மனதில் உறுதி வேண்டும்’ ஆகிய படங்கள்
வெளியாகியுள்ளது அதில் விஜயகாந்த் நாயகனாக நடித்த படங்கள் இரண்டு இவை ஒவ்வொன்றுமே ஒவ்வொரு வகையில் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தவை.

#மனதில் உறுதி வேண்டும்

கதாநாயகனைச் சுற்றியமைக்கப்பட்ட கதையே, தமிழ் சினிமாவை ஆக்கிரமித்த காலத்தில், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்களின் வழியே, கதை சொன்னவர், இயக்குனர் பாலசந்தர். அவ்வகையில், போராட்டங்களே, வாழ்க்கையாகிப்போன, செவிலியர் ஒருவரின் கதை தான், மனதில் உறுதி வேண்டும்.

நந்தினி எனும் கதை நாயகியின் பிம்பத்திற்கு, மிக பொருத்தமாய் இருப்பார், சுஹாசினி. அவரை தவிர, முன்னணி நட்சத்திரங்களாக, அந்தப் படத்தில் மட்டும், 12 பேரை அறிமுகம் செய்திருந்தார், பாலசந்தர். பாடகர், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ரமேஷ் அரவிந்த், விவேக் மற்றும் சிலர்.
ஒரு பாடலுக்கு ரஜினிகாந்த் சத்யராஜ், விஜயகாந்த் ஆகியோர் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் இடம் பெறுவர். இளையராஜா இசை அமைத்திருந்த இந்தப் படத்தில் ‘சங்கத்தமிழ் கவியே’, ‘மனதில் உறுதி வேண்டும்’, ‘கண்ணின் மணியே’, ‘கண்ணா வருவாயா’ பாடல்கள் ஹிட் ஆனது

#இவர்கள் வருங்காலத் தூண்கள்

பிரபு நடித்த 50வது படம்  ‘இவர்கள் வருங்காலத் தூண்கள்’. 
அறிமுக இயக்குனர் வெங்கட் இயக்கிய முதல் திரைப்படம். இதில் பிரபு, அம்பிகா, ஜெய்சங்கர், காந்திமதி, ஆனந்தராஜ், நாகேஷ், ரகுவரன் ரவிச்சந்திரன் சாமிக்கண்ணு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் டி. ராஜேந்தர்

#சட்டம் ஒரு விளையாட்டு

விஜயகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகியிருந்த உழவன் மகன் வெளியாகிறது என அறிவித்திருந்த நிலையில் அவர் கதாநாயகனாக நடித்த மற்றொரு படமும் வெளியானது
ஷோபா சந்திரசேகர் தயாரிப்பில் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய படம் இப்படத்தில் விஜயகாந்த் மற்றும் ராதாமுக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.எஸ்.ஏ.சந்திரசேகர் – விஜயகாந்த் காம்பினேஷனில் ‘சட்டம்’ சார்ந்து வெளியான படங்களில் ‘சட்டம் ஒரு விளையாட்டு’ம் ஒன்று. எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த இப்படமும் எஸ்.ஏ.சி.யின் வழக்கமான ‘பழிக்குப் பழி’ பார்முலாவை தழுவியிருந்தது.

#உழவன் மகன்

ரஜினிகாந்த், கமல்ஹாசன் படங்களுக்கு நடுவே விஜயகாந்த் படம் வெளியாகி பெரும் வெற்றியைப் பெறுவது அக்காலகட்டத்தில் சர்வசாதாரண விஷயம். கதை மற்றும் இதர தொழில்நுட்ப அம்சங்களைப் பொறுத்து ரசிகர்கள் வழங்கும் வெற்றியின் அளவும் அமையும். அதனை நன்கு உணர்ந்து தயாரிக்கப்பட்டது ‘உழவன் மகன்’.
சென்னை திரைப்படக் கல்லூரி மாணவர்கள் என்றாலே ஆவணப்படங்கள் தான் எடுப்பார்கள் என்கிற கருத்தியலை

‘ஊமை விழிகள்’ படத்தை இயக்கி வணிகரீதியான படங்களையும் எங்களால் இயக்க முடியும் என்பதை முதன் முறையாக நிருபித்த

ஆபாவாணன் – அரவிந்தராஜ் கூட்டணி.அதன் தொடர்ச்சியாக, ஒரு சாதாரண கதையில் ரேக்ளா ரேஸ் என்கிற பிரமாண்டத்தைக் கலந்து இயக்கிய படம் உழவன் மகன் விஜயகாந்த், ராதிகா, ராதா, ராதாரவி, ஆகியோர் நடித்திருந்தனர்ஆபாவாணன் கதையை அரவிந்தராஜ் இயக்க மனோஜ் கியான் இசையமைத்த இந்தப் படத்தில் இடம்பெற்ற

.‘சொல்லித்தரவா’, ‘செம்மறி ஆடே’ பாடல்கள் திரையரங்குகளில் ரசிகர்களை ஆட்டம் போட வைக்க, ‘உன்னைத் தினம் தேடும் தலைவன்’ அவர்களது உத்வேகத்தைக் கூட்டியது. 

#மனிதன்

ஏவிஎம் தயாரிப்பில்
எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த், ரூபிணி, ரகுவரன் நடிப்பில் வெளியான ‘மனிதன்’, இப்பட்டியலில் வசூலில் முதலிடம் பிடித்தது.‘காளை காளை’, ‘மனிதன் மனிதன்’, ’வானத்தைப் பார்த்தேன்’, ‘ஏதோ நடக்கிறது’ என்று சந்திரபோஸின் இசையில் பாடல்கள் ரசிகர்களை மயக்கின. ஒரு பண்டிகை கால கொண்டாட்டத்திற்கு ஏற்ற படமாக அமைந்து, ரஜினியின் வெற்றிப் படங்களில் ஒன்றாகச் சேர்ந்தது.

#நாயகன்

மணிரத்னம் இயக்கத்தில் 
முக்தா சீனிவாசன் மற்றும் ஜி.வெங்கடேஸ்வரன் தயாரிப்பில் வெளியான ‘நாயகன்’, இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படும் படமாக விளங்குகிறது.
திரையரங்குகளில் வெளியாகி 175   மனிதன் அன்றைய வணிகத்தில் 3 கோடி ரூபாய் வருமானத்தைப் பெற்றது அதை காட்டிலும் குறைவாக 2.5 கோடி வருமானத்தை பெற்றது நாயகன் இளையராஜாவின் இசையில்
‘தென்பாண்டி சீமையிலே’ பாடல் அதனுள் அடங்கிய சோகத்தையும் மீறி நம் மனதில் என்றென்றைக்குமாக ஒட்டிக் கொண்டிருக்கிறது.
‘நாயகன்’ தயாரான காலத்தில், அப்படமே பெரும் வெற்றியைப் பெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகமிருந்தது. அதனால் ‘மனிதன்’ பின்வாங்க வேண்டியிருக்குமோ என்று ரஜினி தரப்பில் யோசனை எழுந்தது.
அந்த நேரத்தில் பிரத்யேகமாக ‘நாயகன்’ படம் பார்க்கும் வாய்ப்பு ரஜினிகாந்த்துக்கு அமைந்தது 

படம் பார்த்து முடித்ததும், தயாரிப்பாளர்ஏவிஎம் சரவணனிடம் நாயகன் கிளாஸ், மனிதன் மாஸ்.ஜெயிப்பது மனிதன் தான் என்றாராம் ரஜினி. சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த படவிழாவொன்றில் இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் பேசியிருந்தார் தயாரிப்பாளரும், கேரளாவில் அன்றைய காலகட்டத்தில் மனிதன், நாயகன் படங்களின் விநியோக உரிமைகளை வாங்கி வெளியிட்டகே.டி.குஞ்சுமோன்.

கேரளாவில்நாயகனை விட மனிதன் படமே விநியோகஸ்தர்களுக்கு லாபம் தந்ததாகக் கூறினார்.

ஆனால் ஒரு படம் காலம் கடந்து எப்போதும் நம்மைபார்க்க தூண்டுவதற்கும்,நம்மை வசியப்படுத்த வெறும் வர்த்தக வெற்றி மட்டுமே போதாது. தரமான, மனதுக்கு நெருக்கமான, பாதிக்ககூடிய படைப்பாக இருக்க வேண்டும் அதனாலேயே கமர்ஷியல்வெற்றி, வசூல் தாண்டி இன்றும் ‘நாயகன்’ மட்டுமே ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.அதற்காக நாயகனோடு வெளியான மற்ற படங்களையும் நாம் சாதாரணமாக கருதிவிட முடியாது.

ஏனென்றால், 1987 தீபாவளி தினத்தன்று அடித்துப் பிடித்து ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, பாலசந்தர், இயக்கத்தில் வெளியான மனதில் உறுதி வேண்டும், எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான படங்களைத் திரையரங்குகளில் பார்த்த ரசிகர்களுக்கு இன்றும் அந்த நினைவுகள் பசுமையாக நெஞ்சில் நிற்கும்.அந்த நினைவுகள் மட்டுமே அப்படங்களோடு தொடர்புடைய அனைத்து கலைஞர்களுக்குமான உண்மையான மரியாதை.ஒரு பண்டிகைக் காலத்தில் திரையரங்குகளுக்கு மக்கள் படையெடுப்பதும் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியே என்று ரசிகர்கள் திறம்பட நம்பிய காலமதுஒரு பண்டிகைக்கு நட்சத்திர நடிகர்களில் எவரேனும் ஒருவரின் படம் வந்தாலே போதும் என்ற நிலைப்பாட்டிற்கு இன்று தமிழ் திரையுலகம் வந்திருக்கிறது.நிச்சயம் அது தரும் தோற்றம் போலியானதுதான் என்பதற்கு உதாரணம்தான் தங்களது படைப்பை நம்பி தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும்ஒரே நேரத்தில் ரஜினிகாந்த்,கமல்ஹாசன்,விஜய்காந்த், பிரபு, சுஹாசினி ஆகியோர் நடித்த படங்களை வெளியிட்டு  திரையரங்குகளில் மக்கள் குடும்பத்துடன் வருகை தந்து படம்பார்த்துகொண்டாட்டமனநிலையுடன் தீபாவளியை கொண்டாட வைத்துள்ளனர் ஆனால் இப்போது அந்த கொண்டாட்ட மனநிலை இல்லை என்றே கூற வேண்டியுள்ளது புதிய படங்கள் தயாரிப்பு, வியாபாரம், விநியோகம், திரையிடல் என சங்கிலி தொடராக பயணித்த திரையுலகம் சங்கிலிகன்னிகள் அறுபட்டுதுண்டாடப்பட்டுள்ளது விநியோகஸ்தர்கள் என்கிற தொழில் செய்தவர்கள், அவர்களை நம்பி தொழில் செய்த எல்லோரும் வெவ்வேறு தொழில்களை நாடி சென்றுவிட்டனர் விநியோக முறை என்பதே அழிவின் விழிம்பில் உள்ளது இவற்றுக்கு எல்லாம் காரணம் படத்தயாரிப்பில், திரையிடலில் மாறிவரும் வியாபாரம், தொழில்முறைகள்தான் என்கின்றனர் திரைத்துறையினர் பாரம்பர்ய உணவுமுறைகளுக்கு மாறிவிடலாம் ஆனால் சினிமா  மாறிவரும் சர்வதேச வியாபார நடைமுறைகளுக்கு மாறினால் மட்டுமே தொழில் செய்ய முடியும் என்பதால் கடந்த கால வெளியீட்டு நிகழ்வுகள் கனவாகவே இருக்கும் அதே போன்று கதைகளம், படைப்பு, இவற்றின் மீது கவனம், நம்பிக்கை கொள்ளாமல் எவ்வளவு சம்பளம் என்கிற மனநிலைக்கு பெரும்பான்மையான நடிகர்கள் வந்துவிட்டனர் அதன் காரணமாக துரித உணவகம் போன்று குறைந்த நாட்களில் வசூலை குவிக்க வேண்டும் என்றால் படம் பார்க்க வரும் பார்வையாளனுக்கு வேறு வாய்ப்பு இல்லாமல் ஒரே படத்தை வெளியிடும் நடைமுறையை நடிகர்கள், தயாரிப்பாளர்கள் தங்களுக்குள் கூட்டணி அமைத்து நடைமுறைப்படுத்தி வருகின்றனர் இதனால் சிறு பட்ஜெட்டில் படம் தயாரிப்பவர்கள் காலப்போக்கில் காணாமல் போக கூடும் என்கின்றனர் தமிழ் சினிமா விமர்சகர்கள் இந்த நடைமுறை மாறுமா எனக் கேட்டால் பாரம்பர்ய நடைமுறைகள் மாறியதை போன்று இவையும் மாறும் அது எப்படி இருக்கும் என்பதை இப்போது கணிக்க முடியாது என்கின்றனர்