தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று காலை(14.08.2022) நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளான நாசர், கார்த்தி, பூச்சி முருகன், கருணாஸ், மற்றும் செயற்குழு உறுப்பினர்களான ராஜேஷ், சச்சு, மனோபாலா, பசுபதி, லதா சேதுபதி, விக்னேஷ், சோனியா, நந்தா.S.D, சரவணன்.V, பிரேம்குமார்.S, ஸ்ரீனிவாசா ரெட்டி(எ)ஸ்ரீமன், M.A.பிரகாஷ், வாசுதேவன்.V.K திரு.ஹேமச்சந்திரன். ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் பிறகு, தமிழ் சினிமாவில் இருந்து 2020-ம் ஆண்டிற்கான தேசிய விருதுக்கு தேர்வான கலைஞர்கள் அனைவரும் பாராட்டப்பட்டார்கள்.
சிறந்த நடிகர் – சூர்யா (சூரரை போற்று)
சிறந்த திரைப்படம் – சூரரைபோற்று -தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா,
சிறந்த திரைக்கதை ஆசிரியர் – சுதா கொங்குரா (சூரரை போற்று),
சிறந்த நடிகை – அபர்ணா பாலமுரளி (சூரரை போற்று),
சிறந்த பின்னணி இசை – ஜி.வி.பிரகாஷ் (சூரரை போற்று),
சிறந்த தமிழ் திரைப்படம் : சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் (இயக்குநர் சாய் வஸந்த்),
சிறந்த படத்தொகுப்பாளர்:
ஸ்ரீகர் பிரசாத் (சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்),
சிறந்த துணை நடிகை :லட்சுமி ப்ரியா சந்திரமௌலி (சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்),
சிறந்த அறிமுக இயக்குநர் மற்றும் சிறந்த வசனகர்த்தா:திரு.மடோன் அஸ்வின் (மண்டேலா),