நம்பிக்கை துரோகத்தை கூறும்‘நேற்று இந்த நேரம்’ திரைப்பட விமர்சனம்

நாயகன் ஷாரிக் ஹாசன், அவரது காதலி ஹரிதா மற்றும் அவர்களது நண்பர்கள் ஊட்டிக்கு சுற்றுலா செல்கிறார்கள். அங்கு காதலர்களுக்கு இடையிலும், நண்பர்களுக்கு இடையிலும் சில மோதல்கள் ஏற்படுகிறது. அந்த மோதலுக்குப் பிறகு நாயகன் ஷாரிக் ஹாசன் திடீரென்று மாயமாகி விடுகிறார். அதுபற்றி போலீசில் புகார் அளிக்க, போலீஸ் நண்பர்களிடம் விசாரணை நடத்திக்கொண்டிருக்கும் போது, புகார் கொடுத்த நண்பரும் திடீரென்று மாயமாகி விடுகிறார். மாயமான இரண்டு பேர் பற்றியும் போலீஸ் விசாரிக்கும் போது, நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒரு கதை சொல்ல, இறுதியில் காணாமல் போனவர்கள் கிடைத்தார்களா?, அவர்கள் மாயமானதற்கு பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பதை போலீஸ் கண்டுபிடித்ததா? இல்லையா? என்பதுதான்  ‘நேற்று இந்த நேரம்’ படத்தின் ஒருவரிக்கதை.வில்லத்தனம் கலந்த நாயகன் வேடத்தில் நடித்திருக்கும் ஷாரிக் ஹாசன், நாயகியாக நடித்திருக்கும் ஹரிதா மற்றும் நண்பர்களாக நடித்திருக்கும் மோனிகா ரமேஷ், காவ்யா அமிரா, திவாகர் குமார், நிதின் ஆதித்யா, ஆனந்த்,  அரவிந்த் மற்றும் ,போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் செல்வா மற்றும் கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் பாலா என படத்தில் வரும் அனைத்து நடிகர்களும் தங்களுக்கான கதாபாத்திரத்தை  குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.ஒரே சம்பவதை பல கோணங்களில் விவரித்து சுவாராஷ்யப் படுத்த இயக்குநர் சாய் ரோஷன்.கே.ஆர், முயற்சி செய்திருக்கிறார். ஆனால்ஒரே காட்சி திரும்ப திரும்ப வருவது ரசிகர்களை சோர்வடைய செய்கிறது.காணாமல் போன ஷாரிக் ஹாசனின் நிலை என்ன? என்ற கேள்வியும், நண்பர்களில் யார் குற்றவாளி? என்ற கேள்வியும் படத்தை  விறுவிறுப்பாக நகர்த்தினாலும், இடையில் வரும் சைக்கோ கொலையாளி உள்ளிட்டவை படத்தின் நீளத்தை அதிகரித்து ரசிகர்களின் பொருமையை சோதிக்கிறது.
விஷாலின் ஒளிப்பதிவும், கெவினின் இசையும் கதைக்கு ஏற்றபடி பயணித்திருந்தாலும், படத்தொகுப்பாளர் கோவிந்த், கையில் கத்திரி எடுக்காமல் இயக்குநர் எடுத்த காட்சிகளை அப்படியே தொகுத்திருப்பது படத்திற்கு பெரும் பலவீனமாக அமைந்திருக்கிறது.