கதாநாயகியாக யாமினிசந்தர் இருக்கிறார் என்று சொல்லுமளவுக்கு அவருக்குக் காட்சிகள் குறைவு.அதிலும் தன்னுடைய இருப்பை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.
கஸ்தூரி ராஜா, முனீஷ்காந்த், வில்லனாக நடித்திருக்கும் கருடாராம், அருள்தாஸ், ஸ்ரீஜித் ரவி,ஏ.வெங்கடேஷ் ஆகியோரும் பொருத்தமாக நடித்திருக்கிறார்கள்.
நவீன தொழில்நுட்ப உதவியுடன் விஜயகாந்த்தும் படத்தில் இருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.சதீஷ்குமார் அவருடைய உழைப்பில் அசாம் காடுகளும் பொள்ளாச்சி பசுமைகளும் யானையின் குறும்புகளும் கண்களில் நிறைகின்றன.
இளையராஜாவின்பின்னணி இசை கதைக்களத்துக்கேற்ப அமைந்திருக்கிறது. மேத்யூவின் சண்டைப்பயிற்சி வியக்க வைக்கிறது.
இயக்குநர் பார்த்திபன் தேசிங்குவின் திரைக்கதை மற்றும் வசனங்கள் படத்துக்குப் பலமாக அமைந்திருக்கின்றன.அன்பு இயக்கியிருக்கிறார்.சண்முகபாண்