பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த் சுவாமி, ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மெய்யழகன்’. 2டி நிறுவனம் தயாரித்து வெளியிட்ட இந்தப் படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்தார்.
கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி கொண்டாடப்பட்டு வருகிறது. ‘மெய்யழகன்’ படத்தின் வசூல் நிலவரங்கள் குறித்து பல்வேறு கருத்துகள் இணையத்தில் உலா வந்தன. ஆனால், படக்குழுவினர் இது தொடர்பாக எந்தவொரு கருத்துமே தெரிவிக்காமல் இருந்தார்கள். தற்போது ‘மெய்யழகன்’ படத்தின் வெற்றி, வசூல் நிலவரம் குறித்து பேட்டியொன்றில் சூர்யா பேசியிருக்கிறார்.
அதில், “‘மெய்யழகன்’ படத்தை தயாரித்ததை பெருமையாக கருதுகிறேன்.