சட்டசபையில் ரவி மோகன் பேசும் காட்சிகளுடன் வெளியான இந்த டீசரின் இறுதியில் இப்படத்தின் பெயர் ‘கராத்தே பாபு’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
சட்டமன்றத்தில் நடக்கும் ஒரு காட்சி டீசரில் இடம்பெற்றிருக்கும் நிலையில் அதில் எதிர்கட்சி தலைவராக வரும் கே.எஸ்.ரவிக்குமார் முதலமைச்சரைப் பார்த்து, “அவர் எதற்கு என் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரின் பழைய பெயரைத் தெரிந்து கொள்ள இவ்வளவு ஆர்வமாக இருக்கிறார், பெயரில் என்ன இருக்கிறது” எனக் கேள்வி எழுப்ப
பின்பு சட்டமன்ற உறுப்பினராக வரும் ரவி மோகன், “முதலமைச்சர் என்னுடைய பழைய பெயரை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதில் மகிழ்ச்சி எனச் சொல்லி, “உங்கள் அனைவருக்கும் என்னை சண்முக பாபுவாகத் தான் தெரியும் ஆனால் எனக்கு இன்னொரு பெயர் இருக்கிறது. 17வருடங்களுக்கு முன் ஆர்.கே.நகர் மக்களால் கொடுக்கப்பட்ட பெயர் அது” எனக் கூறி முடிக்க படத்தின் தலைப்பு ‘கராத்தே பாபு’ எனக் காட்டப்படுகிறது.