முருகப்பன் என்கிற தொழிலதிபருக்கு மனைவி துணைவி தவிர மற்றொரு இளம் காதலியும் இருக்கிறார்கள்.அதனாலேயே அவர் வாழ்க்கையில் ஏற்படும் நெருக்கடி, சிக்கல்களை சுவாரஸ்யத்துடன் விவரிக்கிறதுஇந்தப்படம்.
தம்பிராமையாவின் முதல் மனைவியாக தீபா,இரண்டாம் மனைவியாக சுபா இளம்காதலியாக சுவேதா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.இவர்களில் தீபா கதாபாத்திரம் உளவியல் ரீதியாக அணுகப்பட்டிருக்கிறது.அவரும் பொருத்தமாக நடித்திருக்கிறார். முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் சமுத்திரக்கனியின் செயல்பாடுகள் நெகிழ வைக்கும் வண்ணம் அமைந்திருக்கிறது.
தம்பிராமையாவே இசையமைத்திருக்கிறார்.சாய் தினேஷ் பின்னணி இசை தேவைக்கேற்ப இருக்கிறது.
கேதார்நாத் – கோபிநாத் ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள்.பகட்டான வாழ்வு பட்டுப்போன வாழ்வு ஆகிய இரண்டையும் காட்சிகளிலும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
தம்பிராமையாவின் மகன் உமாபதி ராமையாதான்
குடும்பத்தோடு பார்க்க கூடிய ஆபாசமில்லாத படம்.