சிரிப்பால் அனைவரையும் ஈர்க்கும் சூர்யாவுக்கு சிரிப்பே வராது என்கிற கதாபாத்திரம்.திருமண வைபவத்தில் உற்சாகமாக நடனமாடும் நேரத்திலும் அவர் முகத்தில் சிரிப்பில்லையே என்றெழுந்த கேள்விகளுக்கு விடை படத்தில் இருக்கிறது.
நாயகி பூஜாஹெக்டே ஒப்பனை இல்லாத எளிய அழகு.வழக்கமான இளம்பெண்களைப் போலில்லாமல் ஆழமான அழுத்தமான கொள்கை கொண்டவர் ஆனால் அதை மிக இலகுவாக கனம் குறையாமல் வெளிப்படுத்தும் கதாபாத்திரம்.சவாலான இந்தப் பாத்திரத்தில் பொருத்தமாக நடித்திருக்கிறார்.
சூர்யாவின் வளர்ப்பு அப்பாவாக வரும் ஜோஜுஜார்ஜ் படம் முழுக்க சரவெடியாகவெடித்திருக்கிறார்.
வடக்கத்தி வில்லனாக பிரகாஷ்ராஜ் வருகிறார். அந்தமான் தீவில் வசிக்கும் இயக்குநர்தமிழ்,
சந்தோஷ்நாராயணின் இசையில் பாடல்கள் ஆட்டம் போட வைக்கின்றன.பின்னணி இசையில் காட்சிகளின் தன்மையை உயர்த்திக் காட்டியிருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ்கிருஷ்ணாவுக்குக்