கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இந்த திரைப்படம் மிகுந்த பாராட்டை பெற்றது. இதையடுத்து, தனுஷ் நடித்த ‘கர்ணன்’, உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘மாமன்னன்’ உள்ளிட்ட படங்களை மாரி செல்வராஜ் இயக்கினார்.இதைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் தயாரித்து, இயக்கியுள்ள திரைப்படம் ‘வாழை’. இந்த படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் நடிகர் கலையரசன் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் நிகிலா விமல், திவ்யா துரைசாமி, ‘வெயில்’ படம் மூலம் பிரபலமான பிரியங்கா மற்றும் சில சிறுவர்கள் நடித்துள்ளனர்.
‘வாழை’ படத்தின் முதல் மூன்று பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் இந்த படத்தின் 4வது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி ‘பாதவத்தி என்ற பாடல் வெளியாகி உள்ளது. கிராமத்து மண்வாசனையுள்ள இந்த ஒப்பாரிப்பாடல் மனதை நெகிழ செய்கிறது. சிறுவர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள ‘வாழை’ திரைப்படம் வருகிற 23-ம் தேதி வெளியாகவுள்ளது.
‘வாழை’ படத்தின் முதல் மூன்று பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் இந்த படத்தின் 4வது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி ‘பாதவத்தி என்ற பாடல் வெளியாகி உள்ளது. கிராமத்து மண்வாசனையுள்ள இந்த ஒப்பாரிப்பாடல் மனதை நெகிழ செய்கிறது. சிறுவர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள ‘வாழை’ திரைப்படம் வருகிற 23-ம் தேதி வெளியாகவுள்ளது.